டிவி விவாதத்தில் பேச சான்ஸ் கொடுக்காத நெறியாளர்.. திடீருன்னு பெண் செய்த காரியம்.. அம்மாடியோவ்!
கொல்கத்தா: டிவி நேரலை விவாதத்தில் தான் பேசுவதற்கு நெறியாளர் வாய்ப்பு கொடுக்காததால் கடுப்பான பெண் சமூக ஆர்வலர் ஒருவர் செய்த காரியம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
ஒரு விஷயம் சரியா தவறா என்பதை அந்தந்த நிபுணர்களை வைத்து அவ்வப்போதே விவாதிக்கும் காலம் தற்போது வந்துவிட்டது. அரசியல், சினிமா, சுற்றுச்சூழல், நடிகர் - நடிகை விவாகரத்து, வனம், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட டாப்பிக்குகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
இதற்காக அந்தந்த துறையில் வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அவர்களை அழைத்து டிவி விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இது போல் நேரலைகளில் முக்கியமானவர்கள் முதலில் பேச வாய்ப்பு வழங்கப்படும். அதற்கு பிறகு மற்வர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கம்.

அழைப்பு
இது போல் டிவி விவாதத்தில் தங்களுக்கு பேச அழைப்பு விடுக்காவிட்டால் அந்த ஷோவில் நேரலையில் உணவு சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவர். சிலர் அவர்களாகவே பேச முன் வருவார்கள். இந்த நிலையில் கொல்கத்தாவில் பெண் ஆர்வலர் ஒருவர் நேரலையில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளிக்காததால் அவர் செய்த தீயாய் பரவி வருகிறது.

கொரோனா காலம்
சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோஷினி அலி, கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் குறைபாட்டை காரணம் காட்டி பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என வாதாடினார். இது குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர் பொது நல மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அப்போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு, அதனால் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என வாதிட்டார்.

பட்டாசுகள்
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்படும் மாசு குறித்த விவாதத்தில் ரோஷினி அலி கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கருத்தை கூறுவதற்கு நெறியாளர் நேரம் வழங்காமல் மற்றவர்களிடம் மட்டுமே கருத்தை கேட்டதாக தெரிகிறது.

நடனமாடிய பெண் ஆர்வலர்
இதனால் உட்கார்ந்து உட்கார்ந்து பொறுமையை இழந்த ரோஷினி அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடனம் ஆடியுள்ளார். தீபாவளி முடிந்து பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு விட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications