நான் மட்டும் நிதியமைச்சராக இருந்திருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்திருப்பேன்.. ப.சிதம்பரம் பாய்ச்சல்
பழைய 500,1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்னையில் பிரதமர் பிடிவாதம் பிடித்திருந்தால் நிதியமைச்சராக தானாக இருப்பின் ராஜினாமா செய்திருப்பேன் என்று ப.சிதம்பரம் சொல்லியுள்ளார்.
டெல்லி: அதிகமதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டாம் என்றும், அதனை மீறி பிரதமர் அறிவித்திருந்தால் தற்போது நிதியமைச்சராக தான் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் என்றும் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
டெல்லியில் நடந்த இலக்கியத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது:

முந்தைய காலத்தில் ஆட்சியில் இருந்ததால் மட்டுமே காங்கிரஸ் கட்சி மீது ஊழல் புகார் கூறுவது ஏற்புடையது அல்ல என்றார். அனைத்து ஆட்சிக் காலத்திலும் ஊழல் நடக்கிறது அதனைதான் மறுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆள்கிறா அல்லது வேறு கட்சி ஆட்சி நடத்துகிறதா என்பது பிரச்னையல்ல. ஊழலை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் என்பதால் தண்டிக்கப்படக் கூடாது என்று ஒருபோதும் சொல்லவும் இல்லை.
தற்போதைய நிலையில் அதிக ரூபாய் நோட்டு ஓழிக்கப்படக் கூடாது என்று தான் நிதியமைச்சராக இருந்திருந்தால் பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பேன். பிரதமர் அதனையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பேன் என்றார் ப.சிதம்பரம்
தொழில்நுட்ப பணப்பரிமாற்றம் நகர்புரத்தில் மேற்கொள்ளப்படுவதால் குறுகிய கால பயன் மட்டுமே கிடைக்கும் என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த நடவடிக்கையினால் ஊழல் ஒரு போதும் ஒழிந்துவிடாது என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளிடம் விவாதிக்கவிட்டால் கூட பரவாயில்லை முந்தைய நிதியமைச்சர் யஷ்வந்தி சின்காவிடமாவது மத்திய அரசு கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications