பள்ளிகள் நடத்த முடிகிறதே.. மாட்டுத்தொழுவமும் நடத்துங்கள்.. உ.பி பட்டாலியன் படைக்கு ஆணையிட்ட யோகி!
உத்தர பிரதேசத்தில் சிறைச்சாலையில் மாட்டுத்தொழுவம் நடத்தப்பட இருக்கிறது.
Recommended Video

லக்னோ: 1940ல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸுக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ இந்தப் படை அமைக்கப்பட்டது.
ஆனால் இந்தப் படை உருவாக்கப்பட்ட போது அது இப்படி அவமானப்படுத்தப்படும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். இந்தப் படை இருக்கும் குடியிருப்புகளில் பள்ளிகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தப் பள்ளிகள் போலவே மாட்டுத்தொழுவங்களும் நடத்தலாம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி கோரியிருக்கிறார். அதோடு பட்டாலியன் படைக்கு புதிய ஆலோசனை ஒன்றையும் வழங்கி இருக்கிறார்.

முதல் கோரிக்கை
முதல் கோரிக்கை அரசு மூலம் சில நாட்களுக்கு முன் பட்டாலியன் படைக்கு அனுப்பப்பட்டது. அதில் ''பசுக்களைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். ஆகவே உங்கள் கட்டிடத்திற்குள் மாட்டுத்தொழுவம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும்'' என்றது. எங்கெல்லாம் பட்டாலியன் குடியிருப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அமைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

மறுப்பு தெரிவிப்பு
பட்டாலியன் குடியிருப்பு இயக்குநராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் ராஜிவ் குப்தா இதற்கு அனுமதி அளிக்க வில்லை. அந்தப் பகுதிகளில் மாட்டுத்தொழுவம் நடத்துவது கஷ்டம் என்று கூறினர். அதேபோல் பட்டாலியன் படைக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும் கூறி இருந்தனர்.

மீண்டும்
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ''பட்டாலியன் படையின் குடியிருப்பில் பள்ளிகள் இயங்கி வருகிறது. பள்ளிகளை இயக்க நேரம் இருக்கும் போது மாட்டுத்தொழுவமும் நடத்தலாம்'' என்று கூறி இருந்தார்கள். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

மூன்றாவது முறை
அதன்பின் மூன்றாவது முறையாகக் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ''அப்படி என்றால் சிறையில் நிறைய இடம் இருக்கிறதே அங்குத் திறக்கலாமே'' என்று கேட்டு இருக்கிறார்கள். இதற்கு தற்போது சிறை அதிகாரிகள் எல்லோரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

முதல் கட்டம்
தற்போது முதல்கட்டமாக 12 சிறைகளில் மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட இருக்கிறது. இதை அங்கு இருக்கும் கைதிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும். மாடுகளின் நன்மைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது .
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications