பள்ளிகள் நடத்த முடிகிறதே.. மாட்டுத்தொழுவமும் நடத்துங்கள்.. உ.பி பட்டாலியன் படைக்கு ஆணையிட்ட யோகி!
உத்தர பிரதேசத்தில் சிறைச்சாலையில் மாட்டுத்தொழுவம் நடத்தப்பட இருக்கிறது.
Recommended Video

லக்னோ: 1940ல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸுக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ இந்தப் படை அமைக்கப்பட்டது.
ஆனால் இந்தப் படை உருவாக்கப்பட்ட போது அது இப்படி அவமானப்படுத்தப்படும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். இந்தப் படை இருக்கும் குடியிருப்புகளில் பள்ளிகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தப் பள்ளிகள் போலவே மாட்டுத்தொழுவங்களும் நடத்தலாம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி கோரியிருக்கிறார். அதோடு பட்டாலியன் படைக்கு புதிய ஆலோசனை ஒன்றையும் வழங்கி இருக்கிறார்.

முதல் கோரிக்கை
முதல் கோரிக்கை அரசு மூலம் சில நாட்களுக்கு முன் பட்டாலியன் படைக்கு அனுப்பப்பட்டது. அதில் ''பசுக்களைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். ஆகவே உங்கள் கட்டிடத்திற்குள் மாட்டுத்தொழுவம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும்'' என்றது. எங்கெல்லாம் பட்டாலியன் குடியிருப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அமைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

மறுப்பு தெரிவிப்பு
பட்டாலியன் குடியிருப்பு இயக்குநராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் ராஜிவ் குப்தா இதற்கு அனுமதி அளிக்க வில்லை. அந்தப் பகுதிகளில் மாட்டுத்தொழுவம் நடத்துவது கஷ்டம் என்று கூறினர். அதேபோல் பட்டாலியன் படைக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும் கூறி இருந்தனர்.

மீண்டும்
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ''பட்டாலியன் படையின் குடியிருப்பில் பள்ளிகள் இயங்கி வருகிறது. பள்ளிகளை இயக்க நேரம் இருக்கும் போது மாட்டுத்தொழுவமும் நடத்தலாம்'' என்று கூறி இருந்தார்கள். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

மூன்றாவது முறை
அதன்பின் மூன்றாவது முறையாகக் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ''அப்படி என்றால் சிறையில் நிறைய இடம் இருக்கிறதே அங்குத் திறக்கலாமே'' என்று கேட்டு இருக்கிறார்கள். இதற்கு தற்போது சிறை அதிகாரிகள் எல்லோரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

முதல் கட்டம்
தற்போது முதல்கட்டமாக 12 சிறைகளில் மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட இருக்கிறது. இதை அங்கு இருக்கும் கைதிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும். மாடுகளின் நன்மைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது .
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications