அமைச்சர்களுடன் சேர்த்து என்னையும் கைது செய்து பாருங்க... சிபிஐ அதிகாரிகளுடன் மமதா பானர்ஜி மோதல்!
நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமை
நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்களுடன் சேர்த்து தம்மையும் கைது செய்து பாருங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் மமதா பானர்ஜி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
போலி நிறுவனங்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு செயல்பட்டனர் என்பது வழக்கு. நாரதா என்ற இணையதளம் வெளியிட்ட வீடியோக்கள், படங்கள் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்மையில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கார் அனுமதி கொடுத்திருந்தார். இதனையடுத்து இன்று காலை அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
இதனையடுத்து கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் வழக்கறிஞர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் மமதா பானர்ஜியும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாநில அமைச்சர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிஐ அதிகாரிகளிடம் வாதிட்டார் மமதா பானர்ஜி.
அத்துடன் அமைச்சர்களுடன் சேர்த்து என்னையும் கைது செய்யுங்கள்.. என்னை கைது செய்யாவிட்டால் இந்த இடத்தைவிட்டு வெளியே செல்லப் போவது இல்லை என திட்டவட்டமாக மமதா கூறினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது தொடர்பாக வழக்கறிஞர் அனின்டோ ரவுத் கூறுகையில், சபாநாயகர் மற்றும் மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்களை அதிகாரிகளை கைது செய்ய முடியாது. அதனால் என்னையும் கைது செய்யுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் மமதா பானர்ஜி வாதிட்டார் என்றார்.
இதனிடையே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சபாநாயகர் என்ற முறையில் தமக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சபாநாயகரிடம் அனுமதியும் பெற வேண்டும். ஆனால் சிபிஐ அதிகாரிகள் என் அனுமதி பெறாமலேயே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளதாக மேற்கு வங்க சபாநாயகர் பிமன் பானர்ஜி சாடியுள்ளார். இதனிடையே நாரதா வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய பங்க்சால் நீதிமன்றத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications