38,000 ஜோடிகள் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள பச்சைக் கொடி காட்டிய சீன அரசு!
பெய்ஜிங்: மக்கள் தொகை உலகின் நம்பர் ஒன் நாடான சீனாவில் இந்த வருடம் 38,000 தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தைப் பெற அனுமதி வழங்கியுள்ளது சீன அரசு.
மக்கள் தொகையைக் குறைக்க, சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த சட்டமானது, கடந்த 2013 ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டது.

அதன்படி தகுதியுள்ள தம்பதிகள் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு அனுமதி வழங்கியது. இதன் படி பலர் 2வது குழந்தையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.
சீனாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த விதிமுறை தளர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும் ஒரு குழந்தை வைத்திருப்போர், 2வது குழந்தை பெற விரும்பினால் அதற்கு அரசிடம் முறையாக விண்ணப்பித்து அரசு அனுமதியுடன்தான் குழந்தை பெற வேண்டும்.
இந்த நிலையில் 14.5 லட்சம் தம்பதியினர் 2வது குழந்தை பெற விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த சீன அரசின் குடும்ப நலத்துறை அதிகாரிகள், அவரக்ளில் 38,000 பேருக்கு மட்டும் 2வது குழந்தை பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications