கொத்தாக பலியான சீன மக்கள்.. முடியாத சோகம்.. கொரோனா கண்காணிப்பு முகாம் ஹோட்டல் சரிந்து 10 பேர் பலி
பெய்ஜிங்: கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கி வந்த ஹோட்டல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3097 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651-லிருந்து 80,696-ஆக அதிகரித்துள்ளது.

ஹோட்டல்
இந்த நிலையில் சீனாவில் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 6 மாடிகள் கொண்ட ஹோட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கி வந்தது. கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஏராளமானோர் இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த ஹோட்டல் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது.

மீட்பு பணி
ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் மீட்புக் குழுவினர் மாஸ்க் அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முழுவீச்சில்
இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மீட்பு குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஹோட்டல் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 80 அறைகள் உள்ளன. அந்த அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

10 பேர் பலி
சீனாவில் ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஹோட்டல் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications