புகுஷிமா அணு உலையில் சேமிக்கப்பட்டிருந்த 100 டன் கதிரியக்க நீர் கசிவு: அதிர்ச்சி தகவல்
புகுஷிமா: புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 100 டன் அசுத்த கதிரியக்க நீர் கொள்கலனில் இருந்து கசிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடந்து உருவான சுனாமிப் பேரலைகள் அங்கிருந்த புகுஷிமா அணுஉலையின் மூன்று கொள்கலன்களை முற்றிலும் பாதித்தது.

அப்போது வெளியேறத் தொடங்கிய கதிரியக்கக் கழிவுகள் கொள்கலன்களைக் குளிர்விக்க கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்புத் தொட்டியில் கலந்து வருகின்றன. இந்த நீர் வெளியேறும்போது சுற்றுப்புறத்தில் வாழும் மக்களும் பாதிப்படைவார்கள் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.
இந்த அணுஉலையைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் பெரும் முயற்சி செய்து வரும்போதும் இது தொடர்ந்து பல பிரச்சினைகளை அளித்து வருகின்றது. அந்த வரிசையில் இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த கதிரியக்கக் கழிவுகள் கலந்த அசுத்த நீர் பெருமளவில் வெளியேறியுள்ளதை புதன்கிழமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 100 டன் எடையுள்ள நீரானது சேமிப்புத் தொட்டிகளிலிருந்து கசிந்துள்ளதாக அணு உலையின் ஆபரேட்டர் இன்று தெரிவித்துள்ளார்.
எனினும், கசிந்த இந்த அசுத்த நீரானது அருகில் உள்ள பசிபிக் கடலில் கலந்திருக்கும் என்பதை மறுத்துள்ள அதிகாரிகள் பூமியினால் இது உறிஞ்சப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஜப்பானிலும், பிற நாடுகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்படுத்தியுள்ள கவலையை அறிந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசும் இந்த நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
கடந்த வருடமும் இதுபோல் ஏற்பட்ட பல கசிவுகளை நிறுத்த இந்த நிர்வாகம் போராடியுள்ளது. கடந்த கோடைக்காலத்தில் 300 டன் எடையுள்ள கதிரியக்கக் கழிவுகள் கலந்த அசுத்த நீர் கசிந்ததை அடுத்து இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த சம்பவமே அங்கு நடந்துள்ள பெரிய நிகழ்வாகும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications