புகுஷிமா அணு உலையில் சேமிக்கப்பட்டிருந்த 100 டன் கதிரியக்க நீர் கசிவு: அதிர்ச்சி தகவல்
புகுஷிமா: புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 100 டன் அசுத்த கதிரியக்க நீர் கொள்கலனில் இருந்து கசிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடந்து உருவான சுனாமிப் பேரலைகள் அங்கிருந்த புகுஷிமா அணுஉலையின் மூன்று கொள்கலன்களை முற்றிலும் பாதித்தது.

அப்போது வெளியேறத் தொடங்கிய கதிரியக்கக் கழிவுகள் கொள்கலன்களைக் குளிர்விக்க கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்புத் தொட்டியில் கலந்து வருகின்றன. இந்த நீர் வெளியேறும்போது சுற்றுப்புறத்தில் வாழும் மக்களும் பாதிப்படைவார்கள் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.
இந்த அணுஉலையைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் பெரும் முயற்சி செய்து வரும்போதும் இது தொடர்ந்து பல பிரச்சினைகளை அளித்து வருகின்றது. அந்த வரிசையில் இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த கதிரியக்கக் கழிவுகள் கலந்த அசுத்த நீர் பெருமளவில் வெளியேறியுள்ளதை புதன்கிழமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 100 டன் எடையுள்ள நீரானது சேமிப்புத் தொட்டிகளிலிருந்து கசிந்துள்ளதாக அணு உலையின் ஆபரேட்டர் இன்று தெரிவித்துள்ளார்.
எனினும், கசிந்த இந்த அசுத்த நீரானது அருகில் உள்ள பசிபிக் கடலில் கலந்திருக்கும் என்பதை மறுத்துள்ள அதிகாரிகள் பூமியினால் இது உறிஞ்சப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஜப்பானிலும், பிற நாடுகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்படுத்தியுள்ள கவலையை அறிந்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசும் இந்த நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.
கடந்த வருடமும் இதுபோல் ஏற்பட்ட பல கசிவுகளை நிறுத்த இந்த நிர்வாகம் போராடியுள்ளது. கடந்த கோடைக்காலத்தில் 300 டன் எடையுள்ள கதிரியக்கக் கழிவுகள் கலந்த அசுத்த நீர் கசிந்ததை அடுத்து இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த சம்பவமே அங்கு நடந்துள்ள பெரிய நிகழ்வாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications