இனி நீங்க வரவேண்டாம்.. நாங்க இருக்கோம்.. வருகிறது மரம் நடும் ரோபோட்.. மாஸ் காட்டும் ட்ரீ ரோவர்
அமெரிக்காவில் மரம் நடுவதற்காக ''ட்ரீ ரோவர்'' என்ற ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் மரம் நடுவதற்காக ''ட்ரீ ரோவர்'' என்ற ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நிக் பிரிட்ச், டெய்லர் ரோட்ஸ் ஆகிய மாணவர்கள் இந்த ரோபோட்டை கண்டுபிடித்துள்ளனர்.
4 மாத உழைப்பின் மூலம் இந்த ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை வைத்து இவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர். இதன் மூலம் மிகவும் எளிதாக மரங்களை நடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு முன்பு
சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு நிக் பிரிட்ச், டெய்லர் ரோட்ஸ் இந்த ரோபோட் குறித்த தகவலை வெளியிட்டார்கள். 2015லேயே இதனுடைய சிறிய மாடலை வெளியிட்டு சோதனை செய்து பார்த்தார்கள். அதை வெறும் நான்கு மாதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது அதன் இறுதி மாடல் வெளியாகி இருக்கிறது. இது விற்பனைக்கும் வந்துள்ளது.

எப்படி செயல்படுகிறது ரோபோட்
இந்த ரோபோட், தமிழ்நாட்டில் இருக்கும் நாற்று நடும் எந்திரம் போலவே செயல்படும். ஆனால் என்ன மாதிரியான மண்ணிலும் இது செடியை நட முடியும். இதில் இருக்கும் வலுவான இரும்பு ஆயுதங்கள், மூலம் குழி தோண்டி எளிதாக அதில் செடியை நடமுடியும். இதைப்பற்றிய சோதனை வீடியோ சில வருடங்களுக்கு முன்பே இணையத்தில் வெளியானது.

ரெடிமேட் செடி
இதற்காக அந்த ரோபோட்டில் செடி வைக்கும் பெட்டி ஒன்றுள்ளது. வரிசையாக அதில் இருக்கும் செடிகளை இந்த ரோபோட் நடும். இதற்காக இவர்கள் இருவரும் ரெடிமேட் செடிகளை உருவாக்க, தனியாக தோட்டம் ஒன்றும் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் இந்த செடிகளையும் விற்பனை செய்வார்கள் என்று கூறியுள்ளனர்.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பம்
இதற்கான விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆச்சர்யம் என்னவென்றால் இதில் இருக்கும் 90 சதவிகித பாகங்கள் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. இரும்பு பொருட்களை தவிர எல்லாமே இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கபட்டது. இதனால் இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications