சிட்னி முற்றுகை முடிந்தது: 2 இந்திய பிணையாளிகளும் பத்திரமாக மீட்பு- சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: சிட்னியில் தீவிரவாதியின் பிடியில் இருந்த 2 இந்திய பிணையக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லின்ட் கபே ஹோட்டலுக்குள் புகுந்த ஈரானைச் சேர்ந்த மான் ஹாரன் மோனிஸ்(50) 50 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். பிணையக் கைதிகளில் 5 பேர் தப்பியோடினர். 17 மணிநேரம் கழித்து ஆஸ்திரேலிய போலீசார் ஹோட்டலுக்குள் புகுந்து பிணையக் கைதிகளை காப்பாற்றினர்.

முன்னதாக போலீசாருக்கும், மோனிஸுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 4 பிணையக் கைதிகள் காயம் அடைந்தனர். இந்நிலையில் ஹோட்டலில் இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவன ஊழியர் விஸ்வகாந்த் அன்கிரெட்டி மற்றும் ஸ்ரீ புஷ்பேந்து கோஷ் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மோனிஸை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன.
அவர் போரில் இறந்த ஆஸ்திரேலிய வீரர்களின் குடும்பத்திற்கு துவேஷமாக கடிதம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications