ஈராக்: மினி பஸ்சில் வெடிகுண்டு... 32 பேர் பலி 150 பேர் காயம்
பாக்தாத்: ஈராக் நாட்டில் மினி பஸ் நிறைய வெடிகுண்டுகளை நிரப்பி வந்து சோதனைச் சாவடி அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். 150 பேர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கில் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் பொது இடங்களிலும், அரசாங்க அலுவலகங்களை குறி வைத்தும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அங்கு இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் பாக்தாத்துக்கு 60 மைல்கள் தொலைவில் இருக்கும் ஹில்லா நகரில் மினி பஸ்சில் குண்டுகளை ஏற்றி வந்து தீவிரவாத தாக்குதல் நடந்தது.
இது வடக்கு நுழைவு வாயிலாக இருப்பதால் அங்குள்ள சோதனைச்சாவடியில் அதிகாரிகள் சோதனை நடத்த ஏராளமான வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன.
அப்போது பார்க்கிங் பகுதியில் தயாராக நிறுத்தி வைத்திருந்த மினி பஸ்சில் இருந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

32 பலி 150 பேர் காயம்
இந்த குண்டு வெடிப்பில் 12-க்கும் மேற்பட்ட கார்கள், வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு நொறுங்கின. அதில் பெண், 12 வயது குழந்தை உள்பட 32 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 150 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குண்டு வெடித்ததும் கார்களில் இருந்த பெட்ரோல் தீப்பிடித்து பலர் உடல் கருகி இறந்தனர்' என்றார்.

யார் பொறுப்பு?
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் சமீபத்தில் தீவிரவாதிகள் அரங்கேற்றிய பெரிய தாக்குதல் இதுவாகும்.

8,868 பேர் மரணம்
ஐ.நா.வின் கணக்கெடுப்பின்படி ஈராக் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல்களில் கடந்த ஆண்டில் 8,868 பேர் பலியானார்கள்.

2 மாதத்தில் 1,400 பலி
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications