அரசு வக்கீலைக் கொன்ற வழக்கு... 8 தமிழர்கள் மலேசியாவில் கைது.. 6 பேர் மீது கொலை வழக்கு
கோலாலம்பூர்: மலேசியாவில் துணை அரசு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 தமிழர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எட்டு பேரில் ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த டாக்டர் ஆவார். மலேசியாவில் பரபரப்பான பல வழக்குகளை நடத்தி வந்தவர் கொலையான வழக்கறிஞர் அந்தோணி கெவின் மொராய்ஸ்.

செப்டம்பர் 4ம் தேதி மொராய்ஸ் மாயமானார். அவரைப் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், புத்ரஜெயா அருகே ஒரு இடத்தில் மொராய்ஸின் உடல் சிக்கியது. ஒரு பெரிய எண்ணெய் டிரம்மில் அவரது உடல் போட்டு வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் ஒருவர் பின் ஒருவராக 8 பேரும் சிக்கினர். இந்த வழக்கி் டாக்டர் குணசேகரன் (ராணுவ டாக்டர்), ஜி. குணேசேகரன், தினேஷ்வரன், தினேஷ் குமார், விஸ்வநாத், நிர்மலன், ரவிச் சந்திரன், முருகன் அருஜலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் குணேசகரன், துவாங்கு ராணுவ மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் மீது ஏற்கனவே 2013ம் ஆண்டே ஒரு வழக்குப் போடப்பட்டது. அதிலிருந்து அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
செப்டம்பர் 4ம் தேதி மொராய்ஸை கடத்திச் சென்று இந்தக் கும்பல் கொலை செய்து உடலை டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதில் 6 பேர் மீது கொலை வழக்கும், மெக்கானிக் முருகன் அருஜலன் உள்பட 2 பேர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நவம்பர் 30ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications