அட கடவுளே.. உடல் வலிமைக்காக அணில் கிட்னியை பச்சையாக சாப்பிட்ட தம்பதி.. பிளேக் நோய் தாக்கி பலி
யுல்லான்பட்டர்: மங்கோலியாவில் உடல் வலிமைக்காக அணில் கிட்னியை பச்சையாக சாப்பிட்ட தம்பதி பிளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆண்டுகள் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்பதே விருப்பம். இதற்காக பலரும் உடற்பயிற்சி, உணவு முறை என பல வழிகளை பின்பற்றி வருகிறோம்.
ஆனால் மங்கோலியா நாட்டு மக்களோ அணில் கறியை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமையாக இருக்கும் என நம்பி வருகின்றனர். அதனடிப்படையில் பலரும் அணில் கறியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

பச்சையாக அணில்கறி
அப்படி மங்கோலியா நாட்டில் உடல் வலிமைக்காக அணில் கறியை பச்சையாக சாப்பிட்ட ஒரு தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது.

கிட்னி, பித்தப்பை
இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை பெரிய அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை அப்படியே பச்சையாக உண்டனர்.

உடல்சோர்வு
இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த தம்பதியர் மருத்துவமனைக்கு சென்றனர்.

கணவர் பலி
அப்போது இருவருக்கும் பிளேக் நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் கணவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

9 மாத குழந்தை
அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 14 வயது முதல் 9 மாதம் வரை 4 குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு
ஆனால் அந்த தம்பதிக்கு பிறகு யாரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் அப்பகுதியில் வேறு யாரேனும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என உலக சுகாதார மையம் கண்காணித்து வருகிறது.

700 ஆண்டுகளுக்கு முன்பு
700 ஆண்டுகளுக்கு முன்பு 1800களில் ஐரோப்பிய மக்கள் தொகையில் 60 விழுக்காட்டை விழுங்கியது இந்த பிளேக் நோய். கொறித்துண்ணிகள் மூலம் பரவிய இந்த பிளேக் நோய் சீனா, ஹாங்காங் மற்றும் அதன் அருகில் இருந்த துறைமுக நகரங்களில் லட்சக்கணக்கானோரை பலிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications