பூமி போர் அடிக்குது.. அந்த 'புதிய' நாட்டுக்கு நாங்களும் வர்றோம்!
விண்வெளியில் உருவாகும் புதிய நாட்டில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோ: விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாகி வருகிறது. இதில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொழிற்சாலைகள், வாகனங்களின் புகை உள்ளிட்டவற்றால் பூமி மாசடைந்து வருவதாக விஞ்ஞானிகள் ஒரு புறம் எச்சரித்து வருகின்றனர். அதேசமயம் பூமிக்கு மாற்றாக மனிதர்கள் வாழும் கோள் உள்ளதா என்ற ஆராய்ச்சியிலும் வல்லரசு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் விண்வெளியில் புதிய நாட்டை ஒன்றும் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஸ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

விண்வெளியில் புதிய நாடு
அதற்கு ‘அஸ்கர்டியா' என பெயரிடப்பட்டுள்ளது. விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பாரீசில் அறிவித்தார்.

ஏராளமானோர் விண்ணப்பம்
அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விண்வெளியில் உருவாகும் புதிய நாட்டில் குடியேற ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

5 லட்சம் பேர் விண்ணப்பம்
இந்நிலையில் உலக அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் புதிய நாட்டில் வசிக்க விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனராம்.

2 லட்சம் பேர் தேர்வு
அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி நாட்டில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் அடிக்கல்
இந்த விண்வெளி நாட்டின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் அஸ்கர்டியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் வருகிற செப்டம்பரில் அனுப்பப்பட உள்ளது.

ரொட்டி போன்ற அமைப்பில் அடிக்கல்
அது ஒரு ரொட்டி போன்ற அமைப்பில் 20 செ.மீ. நீளம் இருக்கும். 2.3 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் உருவாகும் நாட்டில் மக்கள் குடியேறும் முதல் படியாக அஸ்கார்சியா-1 விண்கலம் செயல்படும் என டாக்டர் அசுர்பெய்லி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications