பாகிஸ்தானில் 70 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த சீக்கியர் கோவில் திறப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 70 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த சீக்கியர்கள் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருக்கும் ஹஸ்திநாக்ரி பகுதியில் உள்ளது பாய் பீபா சிங் சீக்கியர்கள் கோவில். இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தானில் இருந்த இந்தியர்கள் கிளம்பிய பிறகு அந்த கோவில் மூடப்பட்டது.

Ancient Sikh temple reopened in Pakistan after 70 years of partition

கடந்த 70 ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவில் வழிபாட்டிற்காக கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோவிலை திறந்த உடன் சீக்கியர்கள் அங்கு பூஜை நடத்தினர்.

இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து உரிமை இயக்க தலைவர் ஹாரூன் சரப்தியால் கூறுகையில்,

வரலாற்று சிறப்புமிக்க சீக்கியர் கோவிலை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கும் சமமான உரிமை அளிக்கப்படுவது தெரிய வந்துள்ளது என்றார்.

கைபர் படுங்க்வா மாகாண முதல்வரின் சிறப்பு உதவியாளர் சர்தார் சுரன் சிங் கூறுகையில்,

இத்தனை ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோவிலை திறக்கும் முடிவை எடுத்து சிறுபான்மையினருக்கு உரிய உரிமையை அரசு வழங்கியுள்ளது என்றார்.

கோவிலுக்கு ரூ.30 லட்சம் நன்கொடை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சுரன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+