மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது லேசுபட்ட காரியமில்லை.. ஆன்டிகுவா எதிர்க்கட்சி வைத்த செக்!
ஆன்டிகுவா :இந்தியாவில் இருந்து தப்பி வந்த வங்கி கடன் மோசடியாளரான மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவான் குடிமகனாகக் கருத வேண்டும் என்று ஆன்டிகுவா நாட்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கட்சி (யுபிபி) ஆன்டிகுவா & பார்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுனிடம் வலியுறுத்தி உள்ளது.
இந்தியாவின் அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,578 கோடி ரூபாயை மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் வாங்கிவிட்டு ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பியோடிவர் தான் மெஹுல் சோக்ஸி. இவர் இந்தியாவின் மிகப்பெரிய வைர வியாபாரிகளில் ஒருவராக திகழ்ந்தவர். கீதாஞ்சலி என்ற நகைக்கடை நிறுவனத்தை நடத்திவந்தவர்.
இவர் ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பியோடிய பின்னர் தான், 13,578 கோடி ரூபாய் பஞ்சாப் நேஷனல் வாங்கியில் அவர் மோசடி செய்த விஷயமே வெளி உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்தத. இவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

ஆன்டிகுவா பிரதமர் யோசனை
இந்நிலையில் தான் குடியுரிமை பெற்றிருந்த ஆன்டிகாவில் இருந்து அண்டை நாடான டொமினிகாவுக்கு மெஹுல் சோக்ஸி சென்றுள்ளார். அங்கு அவரை அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து வைத்துள்ளனர். பிடிபட்டார். இதை அறிந்த ஆன்டிகாவின் பிரதமர், மெஹூலை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொமினிகாவுக்கு யோசனை கூறியுள்ளார்.

நம்ம சிட்டிசன்
இதற்குத்தான் ஆன்டிகுவா நாட்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கட்சி (யுபிபி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்டை நாட்டிற்கு சென்ற மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவான் நாட்டின் குடிமகனாகக் கருத வேண்டும் என்று அன்டிகுவா & பார்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுனிடம் வலியுறுத்தி உள்ளது.
சோக்ஸி ஆன்டிகுவான் குடிமகன் என்பதால் அவருக்கு உரிய நலன்களை பெற உரிமை உண்டு, சட்டத்தின் படி நடத்தப்பட வேண்டும் என்று யுபிபி கூறியுள்ளது.

பிரதமர் யோசனைக்கு எதிர்ப்பு
சோக்சியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவது ஏற்கனவே நாட்டின் மீதான தவறான பிம்பத்தை ஏற்படுததி வருகிறது. இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு நேரடியாக அனுப்ப பிரதமர் யோசனை தெரிவிப்பது, சட்டத்தின் ஆட்சியைத் தகர்த்து, சிதைப்பதற்கான முயற்சியாகவே பார்க்க தோன்றுகிறது என்று யுபிபி கட்சியின் செய்தி நிறுவனமான ஆன்டிகுவா நியூஸ் ரூம் கூறியுள்ளது.

எப்போது வருவார்
டொமினிகன் போலீசாரால் கைது செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸியிடம் அனைத்து உண்மையையும் கண்டறிந்த பின்னரே அந்நாட்டு அதிகாரிகள் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்றும் டொமின்கன் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆன்டிகுவான் ஊடகங்களின் தகவல்களின்படி, சோக்சி டொமினிகாவுக்கு படகு மூலம் பயணம் செய்தார். இரு தீவுகளுக்கும் இடையிலான தூரம் 100 கடல் மைல்கள் மட்டுமே இருந்தது. தன்னை வலுக்கட்டாயமாக டொமினிகாவுக்கு கடத்தி சென்றதாக மெஹுல் சோக்ஸி கூறியுள்ளார். ஆனால் ஆன்டிகுவான் போலீசார் மறுத்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications