மரணித்த பின்பும் சிக்கிம் எல்லையை அரைநூற்றாண்டாக காவல்காக்கும் மேஜர் 'பாபா ஹர்பஜன் சிங்'
மரணித்த பின்பும் சிக்கிம் எல்லையை அரை நூற்றாண்டாக காவல் காக்கிறார் மேஜர் பாபா ஹர்பஜன்சிங் என்பது ராணுவத்தினரின் நம்பிக்கை.
காங்டாங்: போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தையும் நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார் 50 ஆண்டுகளுக்கு முன் மரணித்துப் போன ராணுவ வீரர் பாபா ஹர்பஜன்சிங்.
சிக்கிம் தலைநகர் காங்டாங் செல்கிற யாரும் பாபா ஹர்பஜன்சிங் மந்திருக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். சிக்கிம் தலைநகர் காங்டாங் செல்கிற யாரும் பாபா ஹர்பஜன்சிங் மந்திருக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். ராணுவ வீரரான ஹர்பஜன்சிங் 1968-ம் ஆண்டு நாதுலா எல்லை பாதுகாப்பில் இருந்த போது ஆற்றில் தவறி விழுந்து மரணித்தார். அவர் மரணித்த பின்னர் ராணுவ வீரர்களின் கனவில் வந்து தமக்கு சமாதி கட்ட கேட்டுக் கொண்டார். இதையடுத்து உருவானதுதான் இந்த பாபா ஹர்பஜன்சிங் மந்திர்.

பாபா ஹர்பஜன்சிங் கோவில்
அந்த ஆலயத்தில் 3 அறைகள் இருக்கும். ஒன்றில் ஹர்பஜன்சிங் உருவப்படம் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். மற்றொரு அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் இருக்கின்றன.

உயிரோடு பணிபுரிவதாக நம்பிக்கை
இன்னொன்றில் மேஜையும் நாற்காலியும் போடப்பட்டிருக்கும். அந்த அறைக்கு வெளியே ராணுவ வீரர் பாதுகாப்புக்கு நிற்பார். அதாவது பாபா இன்னமும் உயிரோடு பணிபுரிந்து வருவதாகத்தான் ராணுவம் கருதுகிறது.

சீன ராணுவத்தினரும் அச்சம்
அதேபோல் சீனாவுடனான எல்லை பேச்சுவார்த்தைகளிலும் பாப ஹர்பஜன்சிங்குக்கு ஒரு இருக்கை போடப்பட்டிருக்கும். பாபா ஹர்பஜன்சிங் இரவு நேரத்தில் குதிரையில் எல்லையை காவல் காப்பதாக சீன ராணுவத்தினரும் கூட அஞ்சுகின்றனர்.

ஆண்டுதோறும் ரயில் டிக்கெட்
அவர் இறந்த பின்னர் மேஜர் வரை உரிய பதவி உயர்வுகள் முறையாக வழங்கியிருக்கிறது ராணுவம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14-ந் தேதியன்று பாபா ஹர்பஜன்சிங் பெயரில் அவரது பிறந்த மாநிலமான பஞ்சாப்பின் கபுர்தலாவுக்கு டிக்கெட் எடுக்கப்படும். ரயிலில் அவரது உடைமைகள் சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 2 மாதங்கள் கழித்து மீண்டும் சிக்கிம் கொண்டுவரப்படும்.

இன்னமும் நம்பிக்கை
இந்த உடைமைகள் கபுர்தலா போகும்போது அவரது சொந்த கிராமம் திருவிழாவைப் போல நடத்துவர். இப்போது சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் உருவாகியிருக்கிறது. நாதுலா எல்லையில் இருந்து சிறிது தொலைவில்தான் சர்ச்சைக்குரிய பூட்டானின் டோக்லாம் பீடபூமி இருக்கிறது. பாபா ஹர்பஜன்சிங் நாட்டின் எல்லையை எப்போதும்போல காப்பார் என்பது சிக்கிம் மக்களின் நம்பிக்கை.
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications