நைஜரில் ராணுவத்தினர் மீது போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 32 வீரர்கள் உயிரிழந்தனர்
நைஜர்: நைஜீரியாவின் அண்டை நாடான நைஜரில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி விட்டன. "மேற்கத்திய நவீனக் கல்வி" போகோ ஹராம் இயக்கத்துக்கு மிகவும் வெறுப்பைத் தரும் வார்த்தைகள். இஸ்லாமிய வழி கற்பித்தல் தான் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும் (போகோ ஹராம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தமே ‘மேற்கத்தியக்கல்விக்குத் தடை' என்பதுதான்.) என்ற கொள்கைக்கு இடைஞ்சலாக இருந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது இந்த அமைப்பு.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் அடிக்கடி தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு படையினர், அப்பாவி கிராம மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்துகின்றனர். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டு வருகிறது.
நைஜீரியாவைப் பொறுத்தவரையில் அரசு படைகளுக்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்துவரும் கடும் போரினால் இதுவரை 20 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதேபோல் அண்டை நாடான நைஜர் நாட்டிலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து எல்லைப்பகுதி வழியாக நைஜர் நாட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், போசோ நகரில் ராணுவ நிலைகள் மீது நேற்று தாக்குதல் நடத்தினர். ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. எல்லைப்பகுதியில் இந்த சண்டை நடந்ததால் நைஜீரிய ராணுவமும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் நைஜரைச் சேர்ந்த 30 வீரர்களும், நைஜீரியாவின் 2 வீரர்களும் என மொத்தம் 32 பேர் உயிரிழந்ததாக நைஜர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று அதிகாலையில் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி அனைத்து நிலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications