For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை மனித உரிமைகள் நிலை: காமன்வெல்த் நாடுகளுக்கான நிதியை நிறுத்தியது கனடா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கனடா: இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக காமன்வெல்த் நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவியை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பிலான பெரிய குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து கனடா அக்கறை கொண்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜொன் பயார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காமன்வெல்த் நாடுகள் அமைப்பிற்காக கனடா ஆண்டு தோறும் 10 மில்லியன் டாலர்களை வழங்கி வருகிறது. எனினும், இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக இந்த நிதி உதவியை தற்காலிகமாக கனடா நிறுத்தியுள்ளது.

சிறுவர்கள் திருமணங்களை நிறுத்தவும், அது தொடர்பாக தெளிவுபடுத்தவும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Canadian government says that it has suspended its funding to the Commonwealth.According to Canadian media reports, the Canadian government has made this decision over that fact that Sri Lanka is the current chair of the Commonwealth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X