உச்சகட்ட டென்ஷன்.. தலைநகர் கீவ் சுற்றி வளைப்பு... உக்ரைன் மேயர் கடத்தல்.. வெற்றியை நெருங்கிய ரஷ்யா?
கீவ் - உக்ரைன் - ரஷ்யா இடையே விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மெலிடோபோல் நகர மேயரை ரஷ்யா கடத்திவிட்டதாக உக்ரைன் நாடாளுமன்றத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் தலைநகர்:
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் கோர தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டும் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தும் வருகின்றனர். இதுவரை 25 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தலைநகர் கீவ் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் குற்றச்சாட்டு:
இதனிடையே உக்ரைன் அமெரிக்காவின் உதவியுடன் உயிரியல் ஆயுதங்களை தயார் செய்து வந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. தற்போது அதற்கான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் உக்ரைன் ஈடுபட்டு வருவதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் உக்ரைனும் மறுத்துள்ளன.

மேயரை கடத்திய ரஷ்யா:
தலைநகர் கீவை கைப்பற்ற முடியாவிட்டாலும் மற்ற பகுதிகளுக்கு வேகமாக முன்னேறி வரும் ரஷ்யா தெற்கு உக்ரைனில் உள்ள மெலிடொபொல் நகரத்துக்குள் நுழைந்துள்ளது. அந்த நகரின் மேயர் இவான் ஃபெடெரோவை 10 ரஷ்ய வீரர்கள் கடத்தி வைத்திருப்பதாக உக்ரைன் நாடாளுமன்றத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு:
ரஷ்யாவின் தாக்குதலில் பெரும் சேதங்களை சந்தித்து வரும் மாகாணங்களில் ஒன்று மாரிபோல். இங்கு ரஷ்ய படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள் 11 நாட்களாக மின்சாரம், தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இங்கு மட்டும் 1,200 அப்பாவி மக்கள் ரஷ்யாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டு உள்ளனர். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ரஷ்ய படைகள் இங்கு தாக்குதல் நடத்தி வருவதாக நகர மேயர் தெரிவித்து இருக்கிறார்.

கட்டிடங்களை தகர்த்த ஏவுகணைகள்:
நிப்ரோ என்ற நகரத்தில் நேற்று மட்டும் ரஷ்யாவின் 3 ஏவுகணைகள் கட்டிடங்களை தகர்த்துள்ளன. ஒரு காலணி தொழிற்சாலை ரஷ்யாவின் தாக்குதலில் சிதைந்து போயுள்ளது. அதில் பணியாற்றிய காவலாளி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார். கார்கீவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 330 மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள கட்டிடம் தகர்ந்தது.
தாக்குதலை தடுக்க அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் தாக்குதல் குறையவில்லை. கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications