இந்தியப் படைகளை விரட்டியடிக்க தயங்க மாட்டோம்.. சீனா மிரட்டல்
எல்லையில் இந்தியப் படைகளை விரட்டியடிக்க தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
பெய்ஜிங்: எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் இந்தியப் படைகளை விரட்டியடிக்க தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
டோக்லாம் எல்லையில் அத்துமீறும் சீனா அங்கு தனது ராணுவ வீரர்களையும் குவித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படையை குவித்துள்ளது.
எல்லையில் இருந்து தனது படைகளை பின்வாங்க மறுக்கும் சீனா இந்தியாவை மட்டும் தனது படைகளை திரும்பப்பெறக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியப் படைகளை விரட்டியடிக்க கொஞ்சமும் தயங்கமாட்டோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை
இதுதொடர்பாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளிட்டுள்ளது. அதில் இந்தியாவை சிக்கலில் ஆழ்த்தும் பொருளாதார பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சீனா எச்சரித்துள்ளது.

உண்மையான பலத்தை காட்டவேண்டும்
போர் நிகழ்ந்தால் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மோடி உணர வேண்டும் என்றும் சீன ஊடகம் தெரிவித்துள்ளது. தனது உண்மையான பலத்தை நாட்டு மக்களுக்கு ஆளும் அரசு கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

விரட்டியடிக்கும் திறன்
சீனா டோக்லாமில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளது. ஆனால் எல்லைப் பிரச்சனை போராக மாறினால் இந்திய படைகளை விரட்டியடிக்கும் திறன் சீன மக்கள் ராணுவத்திற்கு உள்ளது என்றும் எச்சரித்திருக்கிறது.

இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும்
எல்லையில் அமைதியையே சீனா .விரும்புவதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு பேச்சுவார்த்தையா, போரா என்பதை இந்தியா தான் தீர்மானிக்க வேண்டும் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications