பெரிய பிரச்சனை வர போகிறது.. தயாராக இருங்கள்.. சீனாவை எச்சரிக்கும் மூத்த அதிகாரி.. பரபரப்பு பின்னணி!
பெய்ஜிங்: இந்தியா - சீனா இடையிலான மோதல் கண்டிப்பாக பெரிதாக வெடிக்கும், இது போராக மாற அதிக வாய்ப்புள்ளது என்று சீனாவின் அரசுக்கு அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா சீனா எல்லையில் லடாக் அருகே நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.
அங்கு இந்தியாவின் ராணுவ படையும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

என்ன சொன்னார்
இந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் சீன நாட்டு அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், இந்தியா சீனா பிரச்சனை இப்போது சரியாகாது.இது முழு அளவில் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. சீனா இதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை நாம் குறைவாக எடை போட கூடாது.

நமது எல்லை
நமது எல்லைகளை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும். முதல் ஆளாக நாம் படைகளை குவிக்க வேண்டும். நாம் போருக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை முதல் ஆளாக தாக்க தயாராக இருக்க வேண்டும். சிறிய சிறிய போர் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த நாம் திட்டங்களை வகுக்க வேண்டும்.

அணு ஆயுதம்
இரண்டு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள். எல்லையில் ஆயுதங்களை களமிறக்க நாம் தொடங்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இந்த பிரச்சனை மிக மோசமான நிலையை அடையும். அதேபோல் நாம் ரோந்து பணிகளை அதிகமாக்க வேண்டும். இந்தியா எப்போது வேண்டுமானாலும் அத்துமீறலை நிகழ்த்த வாய்ப்புள்ளது. முழுமையான பிரச்சனை தீர இப்போது வாய்ப்பு இல்லை.

பெரிய பிரச்சனை
எல்லையில் இந்தியாதான் அத்துமீறல்களை செய்து வருகிறது. சீனாவின் கேம்ப்களை இந்தியாதான் அத்துமீறி அகற்றி வருகிறது. சீனா இதை அனுமதிக்க கூடாது. இதே சம்பவம் இனியும் தொடர்ந்தால் உடனே சீனா பதிலடி கொடுக்க வேண்டும். தக்க ராணுவ தாக்குதல் மூலம் இந்தியாவிற்கு சீனா உடனே பதிலடி கொடுக்க வேண்டும். எல்லையில் இந்தியாவின் அத்துமீறலை சீனா வேடிக்கை பார்க்க கூடாது.
Recommended Video

பேச்சுவார்த்தை தோல்வி
பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்கும் காலம் இனி இல்லை என்று பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயோ லியாங் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரசுக்கு இவர் விடுத்துள்ள எச்சரிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சீனா ஏற்கனவே எல்லையில் போருக்கு தயார் ஆகி வருகிறது. தற்போது அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அரசுக்கு இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications