சீனாவைவிட மற்ற நாடுகளில் 8 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. கவலையை எழுப்பிய உலக சுகாதார நிறுவனம்
பெய்ஜிங்: சீனாவை காட்டிலும் மற்ற நாடுகளில் 8 மடங்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் பலி எண்ணிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலையை எழுப்பியுள்ளது.
Recommended Video
சீனாவில் வுகான் நகரத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் சீனாவுக்கு வந்திருந்தோரிடமிருந்து 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருவர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் 24 மணிநேரத்தில் சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் 8 மடங்கு பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசூஸ் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 8 மடங்கு வேகமாக பரவுவதால் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும். தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்கா பயண கட்டுப்பாடு
இந்த நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென் கொரியாவிற்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில் தென் கொரியா மற்றும் இத்தாலியில் உள்ள விமான நிலையங்களில் 12 மணி நேரத்தில் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படும். இதனால் அமெரிக்கா பயண கட்டுப்பாட்டை நீட்டிக்கும் என்றார்.

ஈரான்
இத்தாலியில் பலி எண்ணிக்கை 18-லிருந்து 52 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை முதல் முறையாக லட்வியா, சவுதி அரேபியா, செனேகல், மொராக்கோ ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் அறிய முடிந்தது. ஈரானில் கொரோனா மோசமாக பரவியுள்ளது.

மருந்து தட்டுப்பாடு
அங்கு 1,501 பேருக்கு நோய் பாதிப்பு இருக்கிறது. 66 பேர் பலியாகிவிட்டனர். ஈரானில் உள்ள மருந்து கடைகளில் கையுறை, மருந்துகள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் கொரியாவில 26 பேர் பலியாகிவிட்டனர். 599 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் 377 தேகு நகரத்தை சேர்ந்தவர்கள். இங்கு சீனாவின் கிளையான சின்சியோன்ஜி சர்ச் ஆப் ஜீசஸ் என்ற தேவாயலம் உள்ளது. இதே போன்ற தேவாலயம் சீனாவின் வுகானிலும் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications