கொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் பலி! உலகம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000
மாட்ரிட்: கொரோனா தொற்று நோயால் ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,000 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
சீனாவில் கொரோனா தொற்று நோய் 3,285 மனித உயிர்களை விழுங்கியது. இப்போது உலக நாடுகளில் படுவேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலியில்தான் கொரோனாவின் கொடூர தாக்கம் இருந்து வருகிறது. இத்தாலியில் ஒவ்வொரு நாளும் பல நூறு உயிர்கள் பலியாகி வருகின்றன. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேர் பலியாகினர். இதனையடுத்து இத்தாலியில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இத்தாலியைவிட ஸ்பெயினில் திடீரென கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் மரணித்துள்ளனர். மொத்தம் ஸ்பெயினில் 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளில் சீனாவை விட ஸ்பெயினில் அதிகம். உலகளாவிய அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதேபோல் அமெரிக்காவிலும் கொரோனா ருத்ரதாண்டவமாடுகிறது. அமெரிக்கா முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,000 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 200 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தமாக 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 182 நாடுகளில் மொத்தம் 21,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications