அஸ்பிரின் மருந்து எடுத்துக்காதீங்க.. ரத்தப்போக்கு அதிகரிக்குமாம்.. ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை
அஸ்பிரின் மருந்து எடுத்துக் கொள்வோருக்கு வயிற்றில் ரத்தப்போக்கு அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லான்செட் மருத்துவ ஆய்வு பத்திரிகை இதனை வெளியிட்டுள்ளது.
லண்டன்: அஸ்பிரின் மருந்து நல்லது என்றும் பக்கவிளைவுகள் அதிகம் என்றும் பல வகையான செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் மருத்துவ ஆய்விதழான லான்செட்டில் அஸ்பிரின் மருந்து குறித்து ஓர் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.
இதில், நாம் இதுவரை கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வதால் ஆபத்து அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

இதய நரம்புகளில் ரத்த ஓட்டம்
பொதுவாக இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் தடை ஏற்படுவதாலேயே மாரடைப்பு ஏற்படக் கூடும். அஸ்பிரின் மருந்து இதய நரம்புகளில் தடை ஏற்படுவதை தடுப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதயத்திற்கு இதம்
அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று மருத்துவ உலகம் நமக்கு சொல்லி வந்துள்ளது. உலகில் உள்ள கோடான கோடி இதய நோயாளிகளும் இந்த மருந்ததை உயிர் காக்கும் என நம்பி இதுவரை அருந்தி வந்தனர்.

பக்க விளைவுகள்
அதே வேளையில், அஸ்பிரின் மருந்து அன்றாடம் எடுத்துக் கொள்வோருக்கு வயிற்றுப் புண் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போன்று சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் ரத்தப் போக்கு உள்ளவர்களுக்கு அஸ்பிரின் மருந்து பலனளிக்கவில்லை என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தன.

ஆய்வு கட்டுரை
இந்த நிலையில், லான்செட் என்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் அஸ்பிரின் மருந்து எடுத்துக் கொள்வோருக்கு வயிற்றில் ரத்தப் போக்கு ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
குறிப்பாக, இந்த ஆபத்து 75 வயதுக்கும் மேற்பட்டோருக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வோர் வயிற்றுப் பாதுகாப்பிற்கான கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications