பரிசுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய துபாய் இந்திய துணை தூதரிடம் மனு
வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பரிசுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி துபாய் ஈமான் கல்சரல் சென்டர் சார்பில் இந்திய துணை தூதரிடம் மனு அளிக்கப்பட்டது.
துபாய்: வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பரிசுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி துபாய் ஈமான் கல்சரல் சென்டர் சார்பில் இந்திய துணை தூதரிடம் மனு அளிக்கப்பட்டது.
துபாய் இந்திய துணை தூதராக விபுல் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவரை ஈமான் கல்சுரல் சென்டரின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் ஈமான் கல்சுரல் சென்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், பொருளாளர் அப்துல் உபூர் மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது ஈமான் கல்சுரல் சென்டரின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஈமான் அமைப்பு செய்து வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார். மேலும் இந்திய துணை தூதரகம் மேற்கொண்டு வரும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஈமான் அமைப்பு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவில் அமீரகத்தில் இருந்து இந்தியர்கள் தங்களது சொந்த ஊரில் வசித்து வரும் உறவுகளுக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எவ்வித வரியும் இன்றி அனுப்பி வந்தனர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வரிவிதிப்பு இருந்து வருகிறது.
இதன் காரணமாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் அன்பளிப்பு பொருட்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே வரிவிதிப்பை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைக் கவனமுடன் கேட்ட இந்திய துணைத் தூதர் விபுல், இந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஈமான் அமைப்பு சார்பில் இந்திய துணை தூதர் விபுல் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து இந்திய துணை தூதரகத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சுமதி வாசுதேவ், ராஜு உள்ளிட்டோரையும் சந்தித்து ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications