சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சந்திப்பு.. பாக். குறித்த விவாதம்.. திடீர் திருப்பம்!
Recommended Video

பெய்ஜிங்: சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது. எதிர்பாராத இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமானப்படை நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா சென்று இருக்கிறார். 16வது இந்தியா - சீனா - ரஷ்யா வெளியுறவுத்துறை சந்திப்பில் கலந்து கொள்ள அவர் சீனா சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார். சீனாவில் வாங் யீயை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்.
#WATCH China: External Affairs Minister Sushma Swaraj meets her Chinese counterpart Wang Yi in Wuzhen. pic.twitter.com/RDLfXz6cqV
— ANI (@ANI) February 27, 2019
பாக். மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சீனாவிடம் இந்திய தரப்பு பேச முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இதுகுறித்து விவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ரஷ்யாவிடமும் இந்தியா இதுகுறித்து முறையிட முடிவெடுத்துள்ளது என்கிறார்கள்.
ஆசியாவில் பாகிஸ்தானை தனித்து விட வைக்கும் அளவிற்கு இந்தியா இந்த முன்னெடுப்பை எடுத்து வருகிறது. போர் வரும்பட்சத்தில் நாடுகள் அணி சேர வாய்ப்பு இருப்பதால் இந்தியா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கையாண்டு இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications