பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம் விதிக்கப்படும்- மலேசிய அரசு அதிரடி
பாஸ்போர்ட்டை தொலைவப்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கோலாலம்பூர் : பாஸ்போர்ட்டை தொலைவப்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோல் பணிபுரிந்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மக்களும் அங்கு சுற்றுலாவுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் அங்கு செல்லும் வெளிநாட்டினர் தங்களின் பாஸ்போர்ட்டை தொலைப்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பது தொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில், குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களுக்கு இதுவரை அபராதம் விதித்ததில்லை என்றனர். ஆனால் இனி பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் தங்களின் பாஸ்போர்ட்டை பொறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மலேசியாவில் முதன் முறையாக அடையாள அட்டை காணாமல் போனால் 100 ரிங்கிட் அபராதமும் இரண்டாவது முறை காணாமல் போனால் 300 ரிங்கிட்டும் மூன்றாவது முறை தொலைத்தால் 1000 ரிங்கிட்டும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதே போன்ற அபராதம் இனி பாஸ்போர்ட் தொலைப்பவர்களுக்கும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 44, 528 பாஸ்போர்ட்கள் தொலைந்துபோனதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications