இங்கிலாந்தில் இனி எல்லோருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்- புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் இனி எல்லா ஊழியர்களுக்குமே வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதியானது வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதுநாள்வரை பெற்றோர்களும், குடும்பத்தினரை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையைக் கொண்டிருந்தவர்களும் மட்டுமே வீட்டிலிருந்து வேலை போன்ற சிறப்பு சலுகைகளைப் பெற்று வந்தனர்.

இந்தத் தகுதி அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மில்லியன் ஊழியர்கள் தங்களின் வேலை நேரங்களில் சலுகைகளைப் பெற்றுவந்தனர்.

தளர்த்தப்பட்ட விதிமுறைகள்:

தளர்த்தப்பட்ட விதிமுறைகள்:

ஆனால், இன்றுமுதல் அங்கு நடைமுறைக்கு வந்துள்ள புதிய எளிதாக்கப்பட்ட வேலை நேர விதிகளின்படி நாடு முழுவதிலும் உள்ள 20 மில்லியன் ஊழியர்கள் இத்தகைய சலுகைகளைப் பெறும் வாய்ப்பு அமைந்துள்ளது. இவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வது உட்பட பல வசதிகளைப் பெறமுடியும்.

உத்வேகம் அதிகரிக்கும்:

உத்வேகம் அதிகரிக்கும்:

தங்களுடைய ஊழியர்களின் உத்வேகத்தையும், உற்பத்தித் திறனையும் இந்த புதிய நடைமுறைகள் அதிகரிக்கும் என்பதால் அவர்கள் பணியிலிருந்து விலகமாட்டார்கள் என்று முதலாளிகள் கருதுகின்றனர்.

பொருளாதார மேம்பாடு:

பொருளாதார மேம்பாடு:

மேலும், நாட்டின் பொருளாதாரமும் இதன்மூலம் அதிக அளவில் மேம்படும் என்றும் கருதுகின்றனர். இதனால் ஆட்சேர்ப்பு செலவுகள் குறையும்.

மேம்படும் மனித வளம்:

மேம்படும் மனித வளம்:

இது உண்மையிலேயே வெற்றி பெறக்கூடிய சூழலை உருவாக்கக்கூடும், மனித வளமும் மேம்படும் என்று அந்நாட்டின் வேலை உறவுகள் தொடர்பான அமைச்சர் ஜோ ஸ்வின்சன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+