குண்டு மழை பொழிந்தாலும்.. அமைதியாக கால்பந்து போட்டிகளை ரசிக்கும் ஈராக்கியர்கள்!
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டைய ரணகளப்படுத்தி வரும் நிலையிலும் கூட ஈராக்கியர்கள், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியைப் பார்த்த ரசிக்க தவருவதில்லை.
பாக்தாத் நகரில், வீடுகளிலும், பொது இடங்களிலும் பெரும் திரளான மக்கள் டிவிகளில் கால்பந்துப் போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் குறித்து சற்றும் கவலைப்படாத தீவிர ரசிகர்களாக இவர்கள் உள்ளனர்.

கால்பந்து எங்களை இணைக்கிறது
இதுகுறித்து 30 வயதான டாக்ஸி டிரைவர் ராத் கூறுகையில், கால்பந்துப் போட்டி எங்களை இணைக்கிறது. இங்குள்ள பேஸ்புக் கபேதான் நான் அடிக்கடி வரும் இடம். இங்கு அமர்ந்து நண்பர்களுடன் கால்பந்துப் போட்டிகளை ரசித்துப் பார்க்கிறேன் என்றார் அருகில் இருந்த ஹூக்காவிலிருந்து புகை பிடித்தபடி.

கவலை, பதட்டத்தை மறைக்க
எங்களைச் சுற்றி நிற்கும் கவலைகள், பதட்டங்கள், பயத்தை மறைக்க இதுதான் எங்களுக்கு உள்ள ஒரே வழி என்பது ராத் தெரிவிக்கும் கருத்தாகும்.

எப்ப வேணும்னாலும் கார் வெடிக்கும்
எங்களது வாழ்க்கை நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடிக்கலாம். ஏன் மனித வெடிகுண்டு நபர் இங்கு வந்து குண்டை வெடிக்கச் செய்யலாம் என்றும் சிரித்தபடி கூறுகிறார் எதார்த்தத்தை வெளிப்படுத்தியபடி.

வரலாறு காணாத தாக்குதலில் ஈராக்
ஈராக் தற்போது சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் தாக்குதலில் பல நகரங்கள் வீழ்ந்துள்ளன. பாக்தாத் மட்டும் சற்று தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் படையினரும், காவல்துறையினரும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

விளையாட்டுதான் மனதுக்கு மருந்து
ஆனால் ஈராக்கியர்களுக்குக் குறிப்பாக பாக்தாத் வாசிகளுக்கு கால்பந்துப் போட்டிதான் இப்போதைக்கு நல் மருந்தாக அமைந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications