குண்டு மழை பொழிந்தாலும்.. அமைதியாக கால்பந்து போட்டிகளை ரசிக்கும் ஈராக்கியர்கள்!
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டைய ரணகளப்படுத்தி வரும் நிலையிலும் கூட ஈராக்கியர்கள், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியைப் பார்த்த ரசிக்க தவருவதில்லை.
பாக்தாத் நகரில், வீடுகளிலும், பொது இடங்களிலும் பெரும் திரளான மக்கள் டிவிகளில் கால்பந்துப் போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் குறித்து சற்றும் கவலைப்படாத தீவிர ரசிகர்களாக இவர்கள் உள்ளனர்.

கால்பந்து எங்களை இணைக்கிறது
இதுகுறித்து 30 வயதான டாக்ஸி டிரைவர் ராத் கூறுகையில், கால்பந்துப் போட்டி எங்களை இணைக்கிறது. இங்குள்ள பேஸ்புக் கபேதான் நான் அடிக்கடி வரும் இடம். இங்கு அமர்ந்து நண்பர்களுடன் கால்பந்துப் போட்டிகளை ரசித்துப் பார்க்கிறேன் என்றார் அருகில் இருந்த ஹூக்காவிலிருந்து புகை பிடித்தபடி.

கவலை, பதட்டத்தை மறைக்க
எங்களைச் சுற்றி நிற்கும் கவலைகள், பதட்டங்கள், பயத்தை மறைக்க இதுதான் எங்களுக்கு உள்ள ஒரே வழி என்பது ராத் தெரிவிக்கும் கருத்தாகும்.

எப்ப வேணும்னாலும் கார் வெடிக்கும்
எங்களது வாழ்க்கை நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடிக்கலாம். ஏன் மனித வெடிகுண்டு நபர் இங்கு வந்து குண்டை வெடிக்கச் செய்யலாம் என்றும் சிரித்தபடி கூறுகிறார் எதார்த்தத்தை வெளிப்படுத்தியபடி.

வரலாறு காணாத தாக்குதலில் ஈராக்
ஈராக் தற்போது சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் தாக்குதலில் பல நகரங்கள் வீழ்ந்துள்ளன. பாக்தாத் மட்டும் சற்று தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் படையினரும், காவல்துறையினரும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

விளையாட்டுதான் மனதுக்கு மருந்து
ஆனால் ஈராக்கியர்களுக்குக் குறிப்பாக பாக்தாத் வாசிகளுக்கு கால்பந்துப் போட்டிதான் இப்போதைக்கு நல் மருந்தாக அமைந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications