87 முறை.. கொரோனா தடுப்பூசியை வைத்து இப்படி ஒரு பித்தலாட்டமா.. 60 வயது தாத்தாவின் நூதன மோசடி!
87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவரை ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெர்லின்: போலி சான்றிதழ் தயாரித்து விற்பதற்காக ஜெர்மனியில் 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020ம் ஆண்டு கொரோனா உலக நாடுகளில் வேகமாகப் பரவ ஆரம்பித்த போது, எப்போது இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புதான் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரோ, அப்படியே மக்களின் மனநிலை மாறத் தொடங்கியது. பரிசுகள் கொடுத்து மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசுகள் தள்ளப்பட்டன. அந்தளவிற்கு நம்பிக்கையைப் போலவே தடுப்பூசி பற்றிய பயமும் மக்கள் மத்தியில் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பயம் விலகி, இப்போது இந்தியா உட்பட பல நாடுகள் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி போடப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளது. ஆனால் இன்னமும் தடுப்பூசி போடத் தயங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சரி, இதெல்லாம் இருக்கட்டும், இப்போது அந்த ஜெர்மனி முதியவரின் கதைக்கு வருவோம்.

நூதன மோசடி
மேலே கூறியது போல், தடுப்பூசி போடத் தயங்குகிறவர்கள் ஜெர்மனியில் நிறைய பேர் இருக்கிறார்களாம். அவர்களின் பயத்தையே தனது வருமானத்திற்கான முதலீடாக வைத்து, கொரோனா தடுப்பூசி மூலம் நூதன மோசடி செய்து பணம் சம்பாதித்துள்ளார் அந்த 60 வயது முதியவர். கொரோனா தடுப்பூசியை வைத்து எப்படி வருமானம் பார்த்தார் எனக் குழப்பமாக உள்ளதா? இதோ விளக்கமாகப் பார்க்கலாம்.

போலிச் சான்றிதழ்
கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல நாடுகள் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், இப்படி பொது இடங்களுக்கு செல்ல போலியாக தடுப்பூசி சான்றிதழை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு சான்றிதழை விற்பதற்காகத்தான் சுமார் 87 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் இந்த முதியவர்.

87 முறை தடுப்பூசி
ஜெர்மனியின் மெக்டபெர்க் (Magdeberg) நகரைச் சேர்ந்த இந்த முதியவர், தனது சான்றிதழ்களை விற்பனை செய்ததோடு, போலியாக தடுப்பூசிச் சான்றிதழ் தயாரித்துத் தரும் பணியையும் செய்து வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தான் விற்பனை செய்யும் சான்றிதழ்களில் வரிசை எண் உண்மையான எண்ணாக இருப்பதற்காக, தனக்கு 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார் இந்நபர்.

விசாரணை
சமீபத்தில் எலியன்பெர்க் என்ற ஊரில் நடந்த தடுப்பூசி முகாமில் தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளார். இவரிடமிருந்து சில தடுப்பூசிச் சான்றிதழ் அட்டைகளை அந்நாட்டு காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக தடுப்பூசிச் சான்றிதழ்கள் வழங்கியதற்காக இவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ கண்காணிப்பு
அதோடு, தொடர்ந்து இத்தனை முறை, அதுவும் வெவ்வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டதால், அந்நபரின் உடல்நிலையையும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோன்ற போலி தடுப்பூசி சான்றிதழ்களை போலீசார் பறிமுதல் செய்வது ஜெர்மனியில் இது முதன்முறையல்ல. கடந்த சில மாதங்களாகவே இது போன்ற பல சம்பவங்கள் அங்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications