ஜல்லிக்கட்டுக்கு கடல் கடந்தும் பெருகும் ஆதரவு.. ஜெர்மனியில் பேரணி நடத்திய தமிழர்கள்
ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.
பெர்லின்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜெர்மனியில் தமிழர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
காளையை காட்சி பட்டியலில் சேர்த்ததன் மூலம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் உள்ளது. காளையை பட்டியலில் இருந்து நீக்கி சட்ட திருத்தம் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு. மேலும் அவசர சட்டம் பிறப்பிக்கவும் அது பின்வாங்குகிறது.
தமிழக கட்சிகளை பொறுத்தளவில் மத்திய அரசிடம் நெருக்கடி கொடுத்து ஜல்லிக்கட்டு நடத்த சட்டத் திருத்தம் செய்ய வைப்பதில் படுதோல்வி அடைந்துள்ளன.

வீதியில் இறங்கிய மக்கள்
இந்த சூழ்நிலையில் மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் கலாசாரத்தை காப்பாற்ற வீதிகளில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, மாணவர் சமூகத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை நினைவுகூறும் வகையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகிரார்கள்.

சமூக ஊடகங்கள்
பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் போராட்ட களத்திற்கு விரைகிறார்கள். நேற்று நெல்லையில் நடந்த இளைஞர்கள் போராட்டத்திற்கு சமூக ஊடகங்கள் வாயிலாகவே ஆதரவு பெருகியது. ஒரே நாள் அறிவிப்பில், பெங்களூர், சென்னை நகரங்களில் இருந்து வாகனங்களில் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

வெளிநாடுகளில் தர்ணா
இதேபோல வெளிநாடுகளிலும் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் பென்டோன்வில் நகரத்தின் மைய பகுதியில் திரண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி நின்றனர்.

ஜெர்மனியில்
அதேபோல ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அங்குள்ள காளை சிலை அருகே கூடிய மக்கள், ஜல்லிக்கட்டு ஆதரவு பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ள உணர்வுப்பூர்வ எழுச்சி, தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி போராட்ட களத்தை சூடு பறக்க செய்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications