கானா பெட்ரோல் பங்க் தீவிபத்து... பலியானவர்கள் எண்ணிக்கை 150 ஆனது!
அக்ரா: கானா நாட்டில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீப்பிடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கானா நாட்டில் 3 நாட்கள் அரசு துக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது கானா நாடு. இந்நாட்டின் தலைநகர் அக்ராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அக்ராவில் உள்ள பெட்ரோல் பங்கு ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் சிக்கினர். தீ மளமளவென அக்கம் பக்கத்தில் சுற்றியிருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், இந்த தீவிபத்தில் சிக்கி 150 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்கப் பட்ட சடலங்களில் பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கரிக்கட்டைகளாக கிடப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தீயில் சிக்கி பலியானர்வர்கள் தவிர மேலும் பலர் மழை வெள்ளத்தில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் பல மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின. பெட்ரோல் போடுவதற்காக பயணிகளுடன் அங்கு வந்த பேருந்தும் தீப்பிடித்ததால், அதிலிருந்த பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
150 பேர் பலியான இந்த விபத்திற்கு கானா அதிபர் ஜான் டிராமன் மகாமா அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கானா நாட்டில் 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications