அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்
வாவட்டோசா: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
விஸ்கான்சினில் உள்ள புறநகர் பகுதியில் மேஃபேர் மால் உள்ளது. இந்த மாலில் நேற்று மதியம் 2.50 மணிக்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இதனால் மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அந்த மர்ம நபருக்கு 20 முதல் 30 வயது இருக்கும்.
அவர் வெள்ளை நிறத்தைச் சேர்ந்த அமெரிக்கர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனர். இந்த மால் அடுத்த அறிவிக்கை வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 முதல் 12 குண்டுகள் வெடித்த சப்தம் கேட்டதாக மாலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு அருகிலேயே நடந்த போதிலும் அதை சுட்டவர் யார் என தெரியவில்லை. துப்பாக்கி சூடு சப்தம் கேட்டவுடன் நாங்கள் கீழ்தளத்திற்கு சென்று விட்டோம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications