வீட்டை எரித்துவிட்டீர்கள்.. செல்வதற்கு வீடு இல்லை.. போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் ரணில் பதில்!
கண்டி: தனது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. பொருளாதாரத்தில் சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கைக்கு கொரோனா ஊரடங்கு முதல் நெருக்கடியை தந்தது. அதனால், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. இதனிடையே இயற்கை விவசாயத்திற்கு மாற அரசு நிர்பத்தித்ததும் தேயிலை ஏற்றுமதியை பாதிப்படைய செய்தது. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தில் கடந்த மாதம் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜ்பக்சேவின் வீடு போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் இலங்கையில் இருந்து தப்பித்து சிங்கப்பூர் சென்ற பின் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இருந்தும், மக்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கண்டி நகரில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசுகையில், இலங்கையில் போராடும் மக்கள் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர். எனக்கு வீடில்லை. என் வீட்டை போராட்டக்காரர்கள் எரித்துவிட்டார்கள். ஒன்று அவர்கள் என் வீட்டைத் திருப்பிக் கட்டித் தர வேண்டும். இல்லாவிட்டால் தேசத்தை மீள்கட்டமைக்க உதவியாக இருக்க வேண்டும்.
போராட்டக்காரர்கள் தொடர்ந்து அமைதிக்கு பிரச்னையை ஏற்படுத்துவதால், சர்வதேச நிதியத்திடமிருந்து உதவி பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்போது உள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் யார் நெருக்கடிக்கு காரணம் என்று கூறி அரசியல் செய்ய விரும்பவில்லை.
உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டன. இந்தச் சூழலில் நம் ஒரே நம்பிக்கை சர்வதேச நிதியம் தான். அந்த உதவிகள் கூட நம் நாட்டை முழுமையாக மீட்டெடுக்காது. ஆனால், பிரச்னைகளை சரி செய்ய சில வழிகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications