சிட்னியில் தீவிரவாதியால் பொதுமக்கள் சிறை பிடிப்பு- இந்திய தூதரகம் மூடப்படது!
சிட்னி: சிட்னியில் தீவிரவாதி ஒருவன் காபி ஹோட்டலில் பொதுமக்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இந்திய தூதரகம் மூடப்பட்டு அங்கிருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சிட்னி லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலை தீவிரவாதி ஒருவன் துப்பாக்கி முனையில் பல மணிநேரம் சிறை பிடித்து வைத்துள்ளான். இந்த ஹோட்டலில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் இந்திய தூதரகமும் உள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தூதரகம் மூடப்பட்டு அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சிறைபிடிப்பு சம்பவம் முடிவுக்கு வரும் வரையில் பணியாளர்கள் யாரும் தூதரகத்துக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சிட்னியில் உள்ள இந்திய தூதரக பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.