பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்.. சிறந்த தலைவர் என புகழாரம்
பூடான்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் அரசின் உயரிய விருதை வழங்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பூடான் நாட்டின் உயரிய விருது பெற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகுதியானவர் என்றும் லோடே ஷேரிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
பூடான் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றி பூடான் பிரதமர் இதை உறுதிபடுத்தி உள்ளார்.

பூடான் நாடு முழுவதும் இன்று தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது அந்த நாட்டின் உயரிய விருதாகும். பூடான் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் லோடே ஷேரிங் நாட்டு மக்களுக்கு பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில் உலகத் தலைவர்களில் சிறந்த தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என குறிப்பிட்டார்.
எனவே, பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ பெறுவதற்கான தகுதி பிரதமர் நரேந்திர மோடிக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே பூடான் நாட்டு மக்கள் சார்பாக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ஆன்மீக நாயகனாக பார்க்கப்படும் நரேந்திர மோடிக்கு விரைவில் விருது வழங்கி கவுரவித்து கொண்டாட காத்திருப்பதாக குறிப்பிட்டார். இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக குறிப்பிட்ட பூடான் பிரதமர் கொரோனா தொற்றுகளின்போதும் மோடியின் நிபந்தனையற்ற நட்பும், ஆதரவும் நீடிப்பதாக பெருமையாக கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications