பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கு சவுதி அரேபியாவிற்கு மாற்றம்.. எழுந்தது விமர்சனம்
இஸ்தான்புல்: துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதோடு, வழக்கு விசாரணையை சவூதி அரேபியாவுக்கு மாற்றம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கசோகி. இவர் அந்நாட்டு அரசையும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியேரை விமர்சித்து பத்திரிகை மற்றும் இணையதளங்களில் எழுதி வந்தார்.
இதனால் அவருக்கு அச்சுறுத்தல் எழுந்தது. இதையடுத்து அவர் சொந்த நாடான சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.

பத்திரிக்கையாளர் கொலை
கடந்த 2018 அக்டோபரில் காதலியை திருமணம் செய்ய ஜமால் கசோகி முடிவு செய்தார். இதற்கான ஆவணங்களை பெற ஜமால் கசோகி துருக்கி சென்றார். அங்குள்ள சவூதி அரேபியா தூதரகத்தும் அவர் சென்றார். அதன்பிறகு அவர் மாயமானார். அதன்பிறகு அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சவுதி அரசு உத்தரவில் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுபெரும் சர்ச்சையைானது. இந்த குற்றச்சாட்டை சவுதி தரப்பில் மறுக்கப்பட்டது.

26 பேர் மீது குற்றச்சாட்டு
ஜமால் கசோகி கொலை தொடர்பாக சவூதி அரேபியாவை சேர்ந்த 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு துருக்கி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். மேலும் வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்ற வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

மாற்றம் செய்ய எதிர்ப்பு
இதற்கு மனித உரிமை ஆர்வல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சவுதி அரேபியாவுக்கு வழக்கை மாற்றினால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க நேரிடும் என அவர்கள் கூறினர். மேலும் சொந்த நாட்டில் வழக்கு விசாரணை என்பது முறைப்படி நடக்காது. இதனால் வழக்கை எந்த காரணம் கொண்டும் சவுதி அரேபியாவுக்கு மாற்றம் செய்யக்கூடாது என்றனர்.

மாற்றம் செய்து உத்தரவு
இந்நிலையில் வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்றம் செய்து துருக்கி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது துருக்கி நீதித்துறை அமைச்சரின் உதவியுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துருக்கி நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இனி வழக்கு விசாரணை சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது.

காரணம் என்ன
துருக்கியில் தற்போது பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் சவுதி அரேபியாவுடன் இணக்கமாக செல்ல துருக்கி முடிவு செய்துள்ளது. இதனால் தான் இந்த வழக்கு சவுதி அரேபியாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications