இத்தனை கோடியா!! கேரள நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுக்கும் பில்கேட்ஸ், ஆப்பிள்!
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.
நியூயார்க்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் குழுமத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ. 4.20 கோடியை வழங்கியுள்ளார்.
கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளது.
ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. ஆனாலும் கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு ரூபாய்
மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. கேரளாவில் வெள்ளம் என்றவுடன், அரபு நாடுகள்தான் மிகவும் அதிகஅளவு உதவிகளை செய்தது. இது இல்லாமல் மக்கள் கொடுத்த பணம் மட்டும், கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு 530 கோடி ரூபாய் வந்துள்ளது.

பில் கேட்ஸ் எவ்வளவு
கேரளாவின் வெள்ள நிவாரண பணிகளுக்காக மைக்ரோசாப்ட் குழுமத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ. 4.20 கோடியை வழங்கியுள்ளார். தனது அறக்கட்டளையான பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் மூலம் இதை வழங்கியுள்ளார். யுனிசெப் அமைப்புக்கு இந்த பணம் சென்று சேரும். அதன் மூலம் கேரளா நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

ஆப்பிள் எவ்வளவு உதவி
அதேபோல் கேரளாவிற்கு ஆப்பிள் நிறுவனமும் உதவி முன் வந்துள்ளது. கேரளா நிவாரண பணிகளுக்கு மெர்சி கார்ப்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் பணம் அளிக்க உள்ளது. மெர்சி கார்ப்ஸ் தொண்டு நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாய் வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த பணம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய வசதி
அதேபோல் கேரளாவிற்கு உதவ புதிய வசதிகளையும் கேரளா அரசு செய்து கொடுத்துள்ளது. ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் ஆப்களில் இருந்தும் மக்கள் பணம் செலுத்த முடியும். ஆப் ஸ்டோர், ஐடியூன்ஸ் ஸ்டோர் ஆகியவற்றில் இதற்காக தாற்காலிக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள நிவாரண நிதிக்கு பணம் அளிக்கும் வகையில் ஆப்ஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications