சவுதியில் நடந்த ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விழா
ரியாத்: சவுதி அரேபியா ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விழா கடந்த 17.12.2016 சனிக்கிழமை அன்று மாலை ரியாத் மதீனா சூப்பர் மார்க்கெட் விழா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் திரு கலியமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொருளீட்டப் புலம் பெயர்ந்தோருக்கான சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்திய சர்வதேச பள்ளி மாணவ மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஷேக் முஹமது ஷாஜஹான் தலைமை தாங்கினார். இணை செயலாளர் திரு.வேலுமணி வரவேற்புரை வழங்கினார். இந்தியத் தூதரகத்தின் முதன்மை அதிகாரிகள் திரு. அனில் நோட்டியால் மற்றும் திரு. ராஜமாணிக்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சவுதி அரேபியாவிற்கு வந்து இன்னல்படும் தமிழர்களுக்கு உதவி செய்பவரும், இறந்து விட்ட தமிழர்களின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைத்தல், சிறையில் இருக்கும் தமிழர்களை மீட்டல் போன்ற உதவிகளை செய்து வருபவரும், 2015 சென்னை வெள்ளத்தின் துயர் துடைப்பு பணியில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக சென்னை சென்று களப்பணி ஆற்றியவருமான ரியாத்தின் சமூக ஆர்வலராக அறியப்படும் திரு ஜமால் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சமுதாய சேவையாற்றியதற்காக ஜனாதிபதி விருதுபெற்ற சமூக ஆர்வலர் திரு .ஷிஹாப் கொட்டுக்காடு மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ரியாத் மண்டல மேலாளர் திரு. குண்டன் லால் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். திரு. மஸ்தான் நன்றியுரை கூறினார்.
விழாவின் முடிவில் சவுதி அரேபியா, இந்தியா தேசிய கீதத்தை இந்திய சர்வதேச பள்ளி மாணவர்கள் வாசித்தளித்தனர். விழாவின் அனுசரணையாளர்களை சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு திரு. ஜாபர்சாதிக் சிறப்பு செய்தார். முன்னாள் ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்தளித்தார்.
விழாவின் முழு ஒருங்கிணைப்பும் ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள்தலைவர் திரு. அஹமது இம்தியாஸ் அவர்கள் செய்திருந்தார். ரியாத் வாழ் இதர அமைப்புகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், மாணவர்களும், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications