மாயமான மலேசிய விமானத்தில் 'பவர்கட்': யாராவது கடத்தி இருக்க வாய்ப்பு அதிகம்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் திடீர் என்று மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது அதை யாராவது கடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானத்தை தேடிய மலேசியா அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

பாகம்
விமானத்தை 26 நாடுகள் தேடி வரும் போதிலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் கடலில் தான் விழுந்ததா என்ற சந்தேகம் கூட எழுந்துள்ளது.

செயற்கைக்கோள்
மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து கிளம்பி 90 நிமிடங்கள் கழித்து அதில் இருந்து செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயற்சி நடைபெற்றுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. விமானம் நடுவானில் இருக்கையில் இவ்வாறு செயற்கைக்கோளை தொடர்பு கொள்ள முயல்வது வழக்கமானது அல்ல என்று ஆஸ்திரேலியா மேலும் தெரிவித்துள்ளது.

மின்வெட்டு
விமானம் செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயன்ற நேரம், சூழலை பார்க்கையில் அதில் திடீர் என்று மின்வினியோகம் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஹேண்ட்ஷேக்
செயற்கைக்கோளை தொடர்பு கொள்ள அனுமதி கேட்பதற்கு பெயர் ஹேண்ட்ஷேக். விமானத்தில் மின்சாரம் இல்லாததால் தான் இப்படி அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடத்தல்
விமானத்தில் மின் வினியோகம் இல்லாமல் இருந்திருக்கிறது என்றால் அதை யாரோ கடத்த முயன்றபோது தான் நடந்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விமான போக்குவரத்து நிபுணரான பீட்டர் மாரோஸ்கி தெரிவித்துள்ளார்.

பேட்டரி
விமானத்தை கடத்த நினைப்பவர்கள் அதில் மின்வெட்டை ஏற்படுத்த பேட்டரி கன்ட்ரோல் ஸ்விட்சை திறந்திருக்க வேண்டும். அப்படி செய்தால் எனிஜினை தவிர பிறவற்றுக்கு மின்சாரம் செல்லாது என்று பீ்ட்டர் தெரிவித்தார்.

என்ஜின்
என்ஜினில் சிறிய கம்ப்யூட்டர் இருக்கும். கியர்பாக்ஸில் இருக்கும் ஜெனரேட்டர் மூலம் என்ஜினிக்கு பவர் கிடைக்கும் என்றார் பீட்டர்.

அறிவாளி
விமானத்தில் மின்வெட்டை ஏற்படுத்திவிட்டு மீண்டும் மின் வினியோகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இதை செய்ய விமானம் பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான ஒரு நபர் அல்லது விமானியால் மட்டுமே முடியும் என்று பீட்டர் கூறினார்.

கேப்டன்
விமானம் கடத்தப்பட்டிருந்தால் அதன் கேப்டன் ஜாஹரி அகமது தான் காரணமாக இருக்கக்கூடும் என்று விசாரணை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications