மாயமான விமானத்தை தேடுவதில் மலேசியா மெத்தனமாக இருந்தது- விசாரணை அறிக்கை
கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமான 17 நிமிடங்கள் கழித்துதான் விமான டிராபிக் கட்டுப்பாட்டாளருக்கு அதுகுறித்து தெரியவந்ததாகவும், 4 மணி நேரம் தாமதத்துக்கு பிறகுதான் விமானத்தை தேடும் பணிகள் தொடங்கியதாகவும் மலேசிய அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய விமானம் மாயமான இரு மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக மலேசிய அரசு நேற்று இரவு தனது முதல்கட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:

17 நிமிடங்கள் கழித்துதான்...
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி, மார்ச் 8ம்தேதி அதிகாலை 12.41 மணிக்கு விமானம் கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மலேசிய ரேடார்களின் கண்காணிப்பில் இருந்து விமானம் தவறிவிட்டது. சுமார் 17 நிமிடங்கள் கழித்துதான் கோலாலம்பூர் விமான டிராபிக் கட்டுப்பாட்டாளருக்கு இதுபற்றி தெரியவந்துள்ளது.
அண்டை நாடான வியட்னாமிடம் காலை 1.38 மணிக்கு மலேசிய அதிகாரிகள் தொடர்பு கொண்டு எங்கள் விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து மாயமாகிவிட்டது என்று கூறியுள்ளனர்.

காலை 5.30 மணிவரை ...
ஆனால் காலை 5.30 மணிவரை விமானத்தை தேடும் பணியையோ, மீட்பு பணியையோ மலேசியா மேற்கொள்ளவில்லை. ராணுவத்தினரின் உதவியையும் விமான நிலைய அதிகாரிகள் நாடவில்லை.
முதலில், விமானிதான் வேண்டுமென்றே விமானத்தை திசை திருப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் மலேசிய கட்டுப்பாட்டு எல்லை வந்தது முதல்தான் விமானம் மாயமாகியுள்ளது. மாயமாகும் இரு நிமிடங்களுக்கு முன்பாக விமானியுடன் பேசிய கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள், அடுத்ததாக நீங்கள் வியட்னாம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.

இடம் எது என்பது தெரியவில்லை...
ஆனால் விமானி வியட்னாம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளவில்லை.
தற்போதைய நடைமுறையில், வர்த்தக விமானங்களை கண்காணிக்க சரியான வசதியில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் 2 விமானங்கள் இதுபோல மாயமாகியுள்ளன. ஆனால் அவை கடைசியாக இருந்த இடம் மாயமான இடம் எது என்பது தெரியவில்லை.
எனவே சர்வதேச பயணிகள் விமான அமைப்பு இந்த குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய விமான விபத்து விசாரணை அமைப்பு பரிந்துரைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா செய்த காலதாமதம் ...
இந்த அறிக்கை குறித்து டிகேஎம் ஏவியேசன் டிராபிக் கட்டுப்பாட்டு ஆலோசகர் டவுக் மேக்லீன் கூறுகையில்;
மாயமான விமானத்தை தேட ஆரம்பிக்க மலேசியா செய்த காலதாமதம் அசாதாரணமானது. இரு நாடுகளுக்கு நடுவே பறந்த ஒரு விமானம் காணாமல் போனால் அதிகபட்சம் 3 அல்லது 5 நிமிடங்களில் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். அமெரி்க்கா, ஐரோப்பிய நாடுகளில் 3 நிமிடங்களில் நடவடிக்கை தொடங்கிவிடும். ஆனால் வியட்னாமுடனான தகவல் பரிமாற்றத்துக்கு எடுத்துக்கொண்ட 17 நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரம் என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications