தெற்காசியாவில் தீவிரவாதம் முக்கிய பிரச்சினையாக உள்ளது: சார்க் மாநாட்டில் ராஜபக்சே பேச்சு
காத்மாண்டு: சர்வதேச அளவில் மட்டுமின்றி தெற்காசிய பிராந்தியத்திலும் தீவிரவாதம் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே, சார்க் உச்சி மாநாட்டில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பங்கேற்று உரையாற்றினார். அவர் கூறுகையில் "தெற்காசிய நாடுகள் இமைந்து சுத்தம், சுகாதாரம், தூய்மையான குடிநீர் மற்றும் மனிதவள மேம்பாட்டு விவகாரங்களில் பணியாற்ற வேண்டும். உலக அளவில் வெப்பமயமாதல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அது குறித்தும் சார்க் நாடுகள் விவாதிக்க வேண்டும்.

மின்சாரத்துறையில், இளைஞர்கள் திறன் வளர்ப்பில் சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். தெற்காசிய நாடுகள் கலாச்சாரம், அறிவுசார் விவகாரங்களில் மிகுந்த செழிப்பானவை. புத்த பெருமான் பிறந்த இடம் நேபாளத்தில் இருப்பதான் நேபாள நாட்டின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
உலக அளவில் தீவிரவாதம் பெரும் பிரச்சினையாக உள்ளது. அதுமட்டுமின்றி தீவிரவாதம்தான் தெற்காசியாவிலும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு ராஜபக்சே பேசினார்.
தினமும் தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பு நிகழும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தீவிரவாதம் குறித்து பேசாத நிலையில், இலங்கை அதிபர் தீவிரவாதம் குறித்து பேசியுள்ளார். இலங்கை அரசால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக கூறும், இலங்கை, திடீரென தீவிரவாதம் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications