ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை, வெள்ளம்: 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

ஜப்பானில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர், பலர் மாயமாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

More than 100,000 flee floods in Japan after once-in-50-years rain

ஜோசோ, ஒசாகி, நிக்கோ ஆகிய நகரங்களில் வீடுகள், வயல்கள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளின் கூரைகள் மேல் அமர்ந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் வீட்டின் மேற்கூரைகளில் அமர்ந்திருக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.

ஜப்பானின் ஹோன்ஷு தீவில் இடாவ் புயல் வீசிய 48 மணிநேரத்தில் கனமழை பெய்யத் துவங்கியது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புகுஷிமா அணு உலையில் அணு உலைகளை குளிர்விக்க பயன்படும் நீர் சேமிக்கும் தளம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீர் கடலில் கலந்து விட்டது என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+