நியமான தேர்தலுக்கு பின்... அதிகாரம் திருப்பி அளிக்கப்படும்... மியான்மர் ராணுவம் உறுதி
நைபிடா: நாட்டில் நியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட பின், அதிகாரம் திருப்பி அளிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் நேற்று மீண்டும் ராணுவத்தினரால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. மியான்மர் நாட்டின் முக்கிய தலைவரான அந்நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இவரை தவிரவும் நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்
மேலும், மியான்மர் நாட்டில் அடுத்த ஓர் ஆண்டுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதாக மியான்மார் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நியமான முறையில் தேர்தல்
இந்நிலையில், மியான்மர் நாட்டில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட பின், அதிகாரம் திருப்பி அளிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் மூத்த தலைமை தளபதி மின் ஆங் ஹ்லேங் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் எப்போது
ஜனநாயக முறையில் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதிகாரம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டிற்கு நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த எவ்வித தகவலும் அதில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேர்தல் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி
மியான்மர் நாட்டில் ராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்படுவது இது முதல்முறை இல்லை. இன்னும் சொல்லப்போனால், 1962 முதல் 2015ஆம் ஆண்டு வரை அங்கு ராணுவ ஆட்சியே நடைபெற்றது. ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூச்சி போராட்டத்தை நடத்தினார். இதன் காரணமாக அவர் 21 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். மக்கள் போராட்டம் காரணமாக மியான்மரில் 2015ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆங் சான் சூச்சியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆங் சான் சூச்சி
சட்ட சிக்கல் காரணமாக சூச்சிக்கு நெருக்கமான டின் கியாவ் என்பவர் அதிபரானார். நாட்டில் ஜனநாயக ஆட்சியை அமைக்கப் போராடியதற்காக ஆங் சான் சூச்சிக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இருப்பினும், இவரது கட்சியின் ஆட்சியில்தான் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இது உலக அரங்கில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications