செவ்வாயில் நிலச்சரிவு- மண் குவியலுடன் படம் பிடித்து அனுப்பிய நாசா விண்கலம்!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவை, நாசாவின் மார்ஸ் ஆர்பிட்டார் விண்கலத்தில் உள்ள கேமரா படம் பிடித்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மணல் குன்றுகள் சரிந்து விழுவதை தத்ரூபமாக படம் பிடித்துள்ளது நாசா விண்கலம்.
நிலச்சரிவு அல்லது மண்சரிவு என்பது ஒரு புவியியல் நிகழ்வு ஆகும், பாறைகள் விழுதல், சாய்வுகள் மிகவும் ஆழமாக உருக்குலைதல், ஆழமற்ற குப்பைகள் பறத்தல் போன்ற பல்வேறுபட்ட தரை நகர்வுகளை உள்ளடக்குகிறது.
ஹைரைஸ் எனப்படும் "ஹை ரெசொலூசன் இமேஜிங் சயின்ஸ் எக்ப்ரிமெண்ட்" கேமராவில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 19, 2014 ஆம் ஆண்டில் இந்த புகைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டிருந்தன.
எனினும், தற்போதைய புகைப்படங்கள் இது மிகவும் சமீபத்திய நிலச்சரிவு என்று காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.