குலுங்கிய இந்தோனேசியா! 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜார்த்தா: தீவு நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவு நாடான இந்த இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.
இதற்குக் காரணம் என்னவென்றால்.. ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது.. இதுவே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகும்.. நிலநடுக்கம் மட்டுமின்றி அப்பகுதியில் எரிமலை வெடிப்புகளும் கூட அடிக்கடி ஏற்படும்.
மெக்சிகோ நிலநடுக்க மீட்புப் பணியில் ராக் ஸ்டாரான 'ஃப்ரைடா' மோப்ப நாய்! தெறிக்கிறது லைக்ஸ்
இந்தோனேசியா
இதற்கிடையே இந்தோனேசியாவில் தற்போது மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள முக்கியமான கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக சாலைகளுக்குத் தஞ்சம் புகுந்தனர்.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கம் ரொம்பவே சக்திவாய்ந்த ஒன்றாக இருந்ததால்.. அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், சுமார் மூன்று மணிநேரத்திற்கு பிறகும் அங்கு கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது. அங்கு உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை 2:47 மணிக்கு 130 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால் காலை 5.43 மணிக்குச் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
பாதிப்பு
அங்குள்ள கட்டிடங்கள் வழக்கமாக நிலநடுக்க பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் வகையிலேயே கட்டுப்பட்டிருக்கும். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு கட்டிடங்களில் லேசான பாதிப்புகளே ஏற்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு ஆஸ்திரேலியாவிலும் உணரப்பட்டது. அந்தளவுக்கு வலிமையான ஒன்றாக இது இருந்துள்ளது. மேலும், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு குறைந்தது 4 சிறு அதிர்வுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டதாகவும் அங்குள்ள வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
வழக்கமான பணிகளை தொடரலாம்
அதில் ஒன்று அதிகபட்சம் ரிக்டர் அளவுகோலில் 5.5ஆகப் பதிவாகியுள்ளது. கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால் கடற்கரைக்கு அருகில் வசித்த மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் இந்தோனேசியா வல்லுநர்கள், விரைவில் இது குறித்துத் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.