36 ஆண்டுகளுக்குப் பின் மாநாடு... தலைநகரில் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு தடை... ‘குழந்தைசாமி’ அதிரடி
பியாங்யாங்:வடகொரியாவில் 36 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், ஆளும் கட்சியின் மாநாட்டை ஒட்டி, தலைநகர் பியாங்யாங்கில் சுப மற்றும் துக்க காரியங்களை நடத்தக்கூடாது என வித்தியாசமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா ஒரு தினுசான நாடு. எதைச் செய்தாலும் அதில் ஒரு முரட்டுத்தனம் நிறைந்திருக்கும். இப்போதும் கூட அப்படிப்பட்ட காரியம் ஒன்று நடந்துள்ளது அங்கு.
கடந்த 36 ஆண்டுகளில் முதல் முறையாக வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து தலைநகர் பியாங்யாங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை சர்வாதிகார ஆட்சி விதித்துள்ளது.

தடை...
திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் யாராவது இறந்தால் இறுதிச் சடங்கைக் கூட செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனராம். வெள்ளிக்கிழமை இந்த மாநாடு தொடங்கவுள்ளது. மாநாடு முடியும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

சோதனை...
மேலும் நகரை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அதேபோல நகருக்குள்ளும் யாரும் வரக் கூடாது. இதை உறுதி செய்ய அடிக்கடி காவல்துறையினரும், ராணுவத்தினரும் சோதனை நடத்தி வருகின்றனராம்.

தற்காலிக தடை...
மாநாட்டு ஏற்பாடுகளுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்பதற்காகத்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் இது தற்காலிகமானதுதானாம். மாநாடு முடிந்ததும் இந்தத் தடை நீங்கி விடுமாம்.

36 ஆண்டுகளுக்குப் பின்...
கடைசியாக ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு 1980ம் ஆண்டு நடந்தது. அப்போது கிம் ஜாங் இல் பதவியில் இருந்தார். இப்போது அவரது மகன் கிம் ஜாங் உன் பதவியில் உள்ளார். வட கொரியாவை ஆண்டு வரும் இந்த சர்வாதிகாரியால் தென் கொரியாதான் தினசரி தலைவலியை அனுபவித்து வருகிறது.

5 நாட்கள்...
33 வயதாகும் கிம் ஜாங் உன், இந்த மாநாட்டின் மூலம் நாட்டின் அசைக்க முடியாத தலைவராக தன்னை வெளிப்படுத்தவுள்ளார். இந்த மாநாடு 5 நாட்கள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications