36 ஆண்டுகளுக்குப் பின் மாநாடு... தலைநகரில் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு தடை... ‘குழந்தைசாமி’ அதிரடி
பியாங்யாங்:வடகொரியாவில் 36 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், ஆளும் கட்சியின் மாநாட்டை ஒட்டி, தலைநகர் பியாங்யாங்கில் சுப மற்றும் துக்க காரியங்களை நடத்தக்கூடாது என வித்தியாசமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா ஒரு தினுசான நாடு. எதைச் செய்தாலும் அதில் ஒரு முரட்டுத்தனம் நிறைந்திருக்கும். இப்போதும் கூட அப்படிப்பட்ட காரியம் ஒன்று நடந்துள்ளது அங்கு.
கடந்த 36 ஆண்டுகளில் முதல் முறையாக வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து தலைநகர் பியாங்யாங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை சர்வாதிகார ஆட்சி விதித்துள்ளது.

தடை...
திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் யாராவது இறந்தால் இறுதிச் சடங்கைக் கூட செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனராம். வெள்ளிக்கிழமை இந்த மாநாடு தொடங்கவுள்ளது. மாநாடு முடியும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

சோதனை...
மேலும் நகரை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அதேபோல நகருக்குள்ளும் யாரும் வரக் கூடாது. இதை உறுதி செய்ய அடிக்கடி காவல்துறையினரும், ராணுவத்தினரும் சோதனை நடத்தி வருகின்றனராம்.

தற்காலிக தடை...
மாநாட்டு ஏற்பாடுகளுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்பதற்காகத்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் இது தற்காலிகமானதுதானாம். மாநாடு முடிந்ததும் இந்தத் தடை நீங்கி விடுமாம்.

36 ஆண்டுகளுக்குப் பின்...
கடைசியாக ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு 1980ம் ஆண்டு நடந்தது. அப்போது கிம் ஜாங் இல் பதவியில் இருந்தார். இப்போது அவரது மகன் கிம் ஜாங் உன் பதவியில் உள்ளார். வட கொரியாவை ஆண்டு வரும் இந்த சர்வாதிகாரியால் தென் கொரியாதான் தினசரி தலைவலியை அனுபவித்து வருகிறது.

5 நாட்கள்...
33 வயதாகும் கிம் ஜாங் உன், இந்த மாநாட்டின் மூலம் நாட்டின் அசைக்க முடியாத தலைவராக தன்னை வெளிப்படுத்தவுள்ளார். இந்த மாநாடு 5 நாட்கள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications