சொர்க்கத்தில் என்னுடன் தான் இருக்கணும்: மனைவிக்கு ஒசாமா கடிதம்
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளுமாறு கூறியதுடன் மறுமை நாளில் தன்னையே கணவனாக தேர்வு செய்யுமாறு தெரிவித்தது தெரிய வந்துள்ளது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தனது கடைசி மூச்சு இருக்கும் வரை அமெரிக்காவை எதிர்த்து போரிட விரும்பியுள்ளார். பின் லேடன் ஓய்ந்துவிட்டதாக கூறப்பட்டபோதிலும் அவரது அப்போத்தாபாத் வீட்டில் இருந்து கிடைத்த ஆவணங்களில் அவர் அமெரிக்காவை எதிர்த்து போரிட தயாராக இருந்தது தெரிய வந்துள்ளது.
பின் லேடன் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இக்கட்டான சூழலில் இருக்க வைத்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கணவன்
பின் லேடன் தான் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள தனது மனைவிக்கு அனுமதி அளித்துள்ளார். ஆனால் மறுமை நாளில் தன்னையே கணவனாக தேர்வு செய்யுமாறு அவர் கடிதம் எழுதியுள்ளார். பின் லேடன் தனது 3 மனைவிகளில் தனக்கு மிகவும் பிடித்த 3வது மனைவிக்கு தான் இந்த கடிதத்தை எழுதியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

மகன்
மகன் மற்றும் 2 மகள்களின் நலன் பற்றி கேட்டு துவங்கும் அந்த கடிதத்தில் ஒசாமா தனது மகனை போர்க்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். நீ மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பாய் என தெரியும். உன்னை அந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறேன் என ஒசாமா தனது மனைவியிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மறுமை நாள்
ஒசாமா தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, நீ தான் எனக்கு பிடித்தவர். இந்த உலகில் விலை மதிப்பற்றவள் நீ. நான் இறந்த பிறகு நீ திருமணம் செய்ய விரும்பினால் அதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் சொர்க்கத்தில் நீ தான் என்னுடன் இருக்க வேண்டும். மறுமை நாளில் நீ என்னை தான் கணவனாக தேர்வு செய்ய வேண்டும். ஒரு பெண் இரண்டு ஆண்களை மணந்தால் மறுமை நாளில் சொர்க்கத்தில் தன்னுடன் இருக்க யாராவது ஒரு கணவரை அவர் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் புஷ்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு பொய்யர், கொலைகாரர் என்று ஒசாமா தனது கடிதம் ஒன்றில் எழுதியுள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. நம் கடைசி மூச்சு இருக்கும் வரை அமெரிக்காவை எதிர்த்து போராட வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான போரால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கடிதம் எழுதியுள்ளார் ஒசாமா.

போர்
தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக புஷ் தெரிவித்துள்ளார். அவர் நம்மை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். நாம் ஒவ்வொரு நாளும் அவரை எதிர்க்க வேண்டும். பாலைவன சிங்கங்களை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று ஒசாமா தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications