ஏமன் நாட்டில் சவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி.. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்!
ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது.
ஸோகோட்ரா: ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது.
ஏமனில் அரசு படைகளுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் மரணம் அடைந்துள்ளனர். ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி ராணுவமும், ஐக்கிய அரபு அமீரகம் ராணுவமும் செயல்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக ஐக்கிய அரபு அமீரக ராணுவம் பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் சவுதி ராணுவ படைகள் ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் தனது படையை களமிறக்கி உள்ளது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரக படையும், ஏமன் படையும் அங்கே களமிறங்கி இருக்கிறது. மூன்று நாட்டு படைகளும் ஒன்றாக சேர்ந்து, அந்த தீவில் பயிற்சி எடுக்க இருக்கிறார்கள். புரட்சி படைக்களுக்கு எதிராக பயிற்சி செய்து வருகிறார்கள்.
இந்த கூட்டு பயிற்சி காரணமாக அங்கு பெரிய பதட்டம் நிலவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தையும், ஏமனையும் இணைக்கும் கடல் வழி பகுதியில்தான் இந்த தீவு உள்ளது.இதனால் அங்கே மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது.
மூன்று நாட்டு படைகளுக்கும் எதிராக மக்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே தீவில் இதுவரை புரட்சி படை ஒன்று கூட இல்லாத போது, ஏன் இந்த திடீர் கூட்டு பயிற்சி என்று மக்கள் கோபமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications