ஈராக்கில் இருந்து நாடு திரும்பிய 300 ஐஎஸ் தீவிரவாதிகள்: பீதியில் இங்கிலாந்து
லண்டன்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 320 போராளிகள் நாடு திரும்பியுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து சுமார் 700 பேர் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரிட்டு வருகின்றனர். அதில் 320 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். அந்த 320 பேரும் அபாயகரமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தலாம் அல்லது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

320 பேர் நாடு திரும்பிய செய்தியை இங்கிலாந்தைச் சேர்ந்த நாளிதழான தி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது பிணையக் கைதிகளின் தலையை துண்டித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த தலை துண்டிப்பு வீடியோக்களில் முகமூடி அணிந்து ஆங்கிலம் பேசும் தீவிரவாதியான ஜிஹாதி ஜான் லண்டனைச் சேர்ந்த முகமது இம்வாசி(26) என்று அண்மையில் தெரிய வந்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மாணவிகள், வாலிபர்கள் ஈராக் மற்றும் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஆர்வம் காட்டுவது போலீசாருக்கு பிரச்சனையாக உள்ளது. அண்மையில் 3 பள்ளி மாணவிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர பெற்றோருக்கு தெரியாமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications